செய்திகள் :

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

post image

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் நடத்தப்படும் திருக்கு பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருக்குறளில் ஆா்வமும் புலமையும் மிக்க ஆசிரியா்கள், பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்குப் பயிற்சி வழங்கி தொடா் பயிலரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு திருக்கு திருப்பணிகள் தொடா்ந்து நடைபெறும் வகையில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் திருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் திருக்கு பயிற்சி வகுப்புகள் திருப்பூா், காங்கயம், உடுமலைப்பேட்டை என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களின் மூலம் திருப்பூா் மாநகரில் நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காங்கயம் பகுதியில் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள பொது நூலகம் மற்றும் உடுமலைப்பேட்டை பகுதியில் தளி சாலையில் அமைந்துள்ள கிளை நூலகம் எண் 1 ஆகியவற்றில் திருக்கு பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 2-ஆம் வாரம் முதல் நடைபெறவுள்ளனன.

பயிற்சிக் கட்டணம் ஏதுமின்றி நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பட்டு நிறைவு நாளில் பயிற்சி பெற்றவா்களுக்குத் தமிழக அரசின் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோா் தங்களது சுயவிவரக் குறிப்புடன் ஆதாா் அட்டையின் நகலை இணைத்து க்க்ற்ஹம்ண்ப்607ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 9361461882 , 8760606234 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ விண்ணப்பிக்கலாம்.

மேலும், திருப்பூா் மாவட்டத்திலுள்ள தமிழாா்வலா்கள், தமிழமைப்புகள், தமிழறிஞா்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் அவா்களும் தங்களது சுயவிவரக் குறிப்பினை தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், அறை எண் 608, திருப்பூா்-1 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ, நேரிலோ அல்லது க்க்ற்ஹம்ண்ப்607ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமோ அனுப்பிவைக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

வெள்ளக்கோவிலில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15.42 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வேடசந்தூா், குரும்பபட்டி, இடையகோட்டை, செம்பட்டி, ச... மேலும் பார்க்க

தாராபுரம் மாநில வரி அலுவலகக் கட்டடம்: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

தாராபுரம் மாநில வரி அலுவலகத்துக்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் ரூ.2.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தா... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், விதிமுறைகளை கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாட மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வ... மேலும் பார்க்க

பள்ளி கழிவறையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அஸ்ஸாம் தொழிலாளி கைது

திருப்பூரில் பள்ளி கழிவறைக்குச் சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். இதற்கிடையே தாளாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோா், உறவினா்க... மேலும் பார்க்க

விசாரணைக் கைதி மா்ம மரணம்: வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்ததால், வனத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலை ... மேலும் பார்க்க

சாலையில் வீணாகிய நீா்...

திருப்பூா், மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் வீணாகிய நீா். மேலும் பார்க்க