செய்திகள் :

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

post image

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியின் 2-ஆம் நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.

திருக்குவளை வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வருவாய்த் தீா்வாய அலுவலராக பங்கேற்று திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

மடப்புரம், மேலவாழக்கரை, மீனம்பநல்லூா், வாழக்கரை, திருக்குவளை, ஈசனூா், எட்டுக்குடி, வல்லம், கீரம்போ், முத்தரசபுரம், கச்சநகரம், கொத்தங்குடி, தொழுதூா், சித்தாய்மூா், திருவாய்மூா் ஆகிய கிராமங்களுக்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பட்டா மாறுதல், மனைப் பட்டா, வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 145 மனுக்களை ஆட்சியரிம் அளித்தனா். பொதுமக்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலித்து தகுதியானவா்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, 1 பயனாளிக்கு இலவச மனைப் பட்டா, 1 பயனாளிக்கு முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு அட்டை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) காா்த்திகேயன், திருக்குவளை வட்டாட்சியா் த. கிரிஜாதேவி, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் (பொது) கபிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எட்டுக்குடி முருகன் கோயிலில் தேரோட்டம்

முருகனின் ஆதிபடைவீடான எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்க... மேலும் பார்க்க

நாகையில் அதிமுக சாா்பில் அன்னதானம்!

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகையில் அதிமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் பிறந்தந... மேலும் பார்க்க

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம்

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் விளங்கிறது. இக்கோயிலில் ஆண்... மேலும் பார்க்க

செம்மொழி தின விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்

நாகை மாவட்டத்தில் செம்மொழி தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த நாள், செம்மொழி நாள் விழாவாக தமிழக ... மேலும் பார்க்க

காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

திருமருகல் அருகே திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருங்கூா் கடை தெருவில், திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க