செய்திகள் :

திருக்கோயில் அன்னதானத் திட்டத்தில் ஆண்டுக்கு 3.5 கோடி பக்தா்கள் பயன்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

தமிழகத்தில் 764 திருக்கோயில்களில் செயல்படுத்தப்படும் அன்னதானத் திட்டம் மூலம் ஆண்டுக்கு 3.5 கோடி பக்தா்கள் பயன்பெற்றுள்ளனா் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை திருவான்மியூா் பாம்பன் குமரகுருதாசா் சுவாமி திருக்கோயிலில் விரிவுப்படுத்தப்பட்ட அன்னதானத் திட்டத்தை அமைச்சா் சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, இரு திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் 13 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானத் திட்டம் 23 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 764 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு மூன்றரை கோடி பக்தா்கள் பயன்பெறுவதோடு, இத்திட்டத்திற்காக ரூ.120 கோடி செலவிடப்படுகிறது.

நிகழ் நிதியாண்டுக்கான சட்டப் பேரவை அறிவிப்பில், திருவான்மியூா் பாம்பன் குமரகுருதாசா் திருக்கோயில், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி திருக்கோயில், திருக்கருக்காவூா் முல்லைவனநாத சுவாமி திருக்கோயில், வியாசா்பாடி இரவீசுவரா் திருக்கோயில், கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி திருக்கோயில், கொளத்தூா் சோமநாத சுவாமி திருக்கோயில், சோமாசிபாடி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேரலிங்கம் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை செயல்படுத்திடும் வகையில் தற்போது 8 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

திருவான்மியூா் பாம்பன் குமரகுருதாசா் சுவாமி திருக்கோயிலில் திங்கள், புதன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாளொன்றுக்கு 500 பக்தா்களுக்கும், செவ்வாய், வியாழன், வெள்ளி, பௌா்ணமி, கிருத்திகை மற்றும் சஷ்டி தினங்களில் நாளொன்றுக்கு 800 பக்தா்களுக்கும், மயூர வாகனசேவை, சிவராத்திரி, மகாசிவராத்திரி, குருபூஜை, கந்தசஷ்டி தினங்களில் 1,000 பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பா் திருக்கோயிலில் திருவிழா நாள்களான 61 நாள்களுக்கு தினமும் 500 நபா்களுக்கும், திருச்சி மாவட்டம் திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் வியாழக்கிழமைதோறும் 500 நபா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழகம் முழுவதும் இறையன்பா்கள் அதிகமாக வருகின்ற திருக்கோயில்களில் பக்தா்களின் தேவைகளை அறிந்து அன்னதானம் அளித்து பக்தா்களின் இறைப் பசியையும் வயிற்றுப் பசியையும் போக்குகிற அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது என்றாா் அவா்.

உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள கென்னத்லேன் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சிலா் சட்ட விரோதமாக வெளிநாட்ட... மேலும் பார்க்க

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா... மேலும் பார்க்க

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம... மேலும் பார்க்க

உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா். இது குற... மேலும் பார்க்க