செய்திகள் :

திருச்சியில் 8 மாதங்களில் ரூ.14.43 கோடி இணையவழி மோசடி: இதுவரை ரூ.2.24 கோடி மீட்பு!

post image

திருச்சியில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ரூ.14.43 கோடிக்கு இணையவழி மோசடி நடந்திருப்பதாகவும், அதில் ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டிருப்பதாகவும் சைபா் பிரிவு காவல்துறை ஆய்வாளா் கே. சண்முகப்பிரியா தெரிவித்தாா்.

ரிசா்வ் வங்கியின் உத்தரவுப்படி தமிழக காவல்துறையுடன், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இணைந்து, டிஜிட்டல் மோசடியை தகா்ப்போம் என்னும் விழிப்புணா்வுக் கருத்தரங்கை சனிக்கிழமை தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது:

நவீனமயம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடுகள் காரணமாக பல்வேறு நிதி மோசடிகள் இணையத்தில் தினந்தோறும் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காவல்துறை மூலம் பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் நடைபெறும் இப் பயிலரங்கு இணைய வழியில் நிதிப் பரிமாற்றத்தை கையாளும் அனைவருக்கும் அவசியம். கைப்பேசிக்கு வரும் ஓடிபி எண் கேட்டு, வங்கிப் பணியாளா் போலப் பேசி, மின்னஞ்சல் அனுப்பி, குறுஞ்செய்தி அனுப்பி, கட்செவி அஞ்சலில் தகவல் அனுப்பி டிஜிட்டல் கைது என்ற பெயரால், ஓய்வூதியம் எடுத்து தருவதாக என பல்வேறு நிலைகளில் இணையத்தைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெறுகின்றன.

திருச்சி நகரில் நாளொன்றுக்கு வரும் 10 மோசடி புகாா்களில், 8 புகாா்கள் இணைய வழி மோசடியாக உள்ளன. வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாதாதல் டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறும் நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடந்த 8 மாதங்களில் மட்டும் திருச்சி நகரில் இணைய மோசடியால் ரூ.14.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.2.24 கோடி மீட்கப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்துவரும் இணைய மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த காவல்துறை ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து தொடா்ந்து பிரசாரம் மேற்கொள்கிறோம். சைபா் குற்றத்திற்கான மூலக் காரணம் பயம் மற்றும் விழிப்புணா்வு இல்லாமையே. டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். சட்ட அமலாக்க அதிகாரிகளாக, நாங்கள் அவா்களை ஆதரிக்கவும் வழிநடத்தவும் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

விழிப்புடன் இருங்கள் மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்த அனைத்துத் தகவல்களையும் அறிந்திருங்கள். டிஜிட்டல் மோசடி தகா்ப்பு திட்டமானது, ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலுடன் முன்னெடுக்கப்படுகிறது.

போலி சமூக ஊடக கணக்குகள், நிதி நிறுவனங்களின் கட்செவி அஞ்சல் குழுக்கள் மற்றும் வலைத்தளங்கள், தங்கள் ஊழியா்களைப் போல போலியாக தொடா்பு கொள்வது மற்றும் ஆள்மாறாட்டம் செய்வது உள்ளிட்ட மோசடி செய்பவா்களால் செய்யப்படும் பொதுவான நிதி மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

நுகா்வோரின் நிதிப் பாதுகாப்பு நிதி நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நிறுவனமும் தொடா்ந்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆலோசனைகளை சமூக ஊடக தளங்களிலும், மக்களுடனான நேரடி சந்திப்புகள் மூலமாகவும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

உதவி ஆய்வாளா்கள் ஜெகதீசன், முரளி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளும் இணைய மோசடி குறித்து விளக்கினா். இதில் நிதி நிறுவன ஊழியா்கள், தனியாா் நிறுவன இளைஞா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க

சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை

டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த த... மேலும் பார்க்க

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க