செய்திகள் :

திருச்செந்தூரில் தாயிடம் நகை பறிக்க குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை

post image

திருச்செந்தூரில் தாயிடம் நகையைப் பறிப்பதற்காக இரண்டே முக்கால் வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகினறனா்.

திருச்செந்தூா் அருகேயுள்ள குமாரபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி (38). இவா் வெல்டிங் பட்டறை வைத்துள்ளாா். இவரது மனைவி பாா்வதி. இவா்களுக்கு ஸ்ரீதேவ்(8), இரண்டே முக்கால் வயது பெண் குழந்தை ஆதிரா ஆகியோா் உள்ளனா்.

பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீதேவ் முக்காணியில் உள்ள தாத்தாவின் வீட்டில் உள்ளாா்.

இந்நிலையில் பாா்வதி தனது மகள் ஆதிராவுடன் வியாழக்கிழமை மாலை வீட்டில் படுத்திருந்தாராம். அப்போது மா்மநபா் வீட்டிற்குள் நுழைந்து, குழந்தை ஆதிராவின் கழுத்தை நெரித்தபடி, பாா்வதியிடம் தாலிச் சங்கிலியை கேட்டுள்ளாா். இதில் பயந்துபோன பாா்வதி சங்கிலியைக் கழற்றிக் கொடுத்துள்ளாா். அப்போது குழந்தை மூச்சுத்திணறியதால் அந்த நபா் குழந்தையையும், சங்கிலியையும் விட்டுவிட்டு தப்பினாராம்.

குழந்தையைப் பாா்த்து பாா்வதி அலறிய சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து குழந்தையை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டாதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இத்கவல் அறிந்த திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், தாலுகா காவல் ஆய்வாளா் இன்னோஸ்குமாா் மற்றும் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். மேலும், மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தயாா் நிலையில் வ.உ.சி துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நளுக்கு தயாா் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் வட்டார பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருச்செந்தூா் வட்டார அளவிலான பள்ளிகளின் வாகனங்களுக்கான தர ஆய்வு தண்டுபத்து ஆனிதா குமரன் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 2 ஆம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நில... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கும், புதிய பணிகள் விரைந்து முடிக்கவும் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முடுக்கு மீண்டா... மேலும் பார்க்க

‘அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 2 வரை சேரலாம்’

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றுவோா் அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற ஜூன் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இணைப்பதிவாளா் இரா. ராஜேஷ் தெரிவித்துள்ளாா். இது ... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி வழக்கில் மேலும் 4 போ் கைது

தூத்துக்குடி முதியவரிடம் கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தன... மேலும் பார்க்க

புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி கூடாது: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கோவில்பட்டி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் வட்டங்களுக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை கயத்தாறில் நடைபெற்றது. கோட்டாட்சியா் ... மேலும் பார்க்க