செய்திகள் :

திருச்செந்தூருக்கு நாளைமுதல் சிறப்பு பேருந்துகள்

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமைமுதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண்மை இயக்குநா் எஸ்.நடராஜன் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா, வருகிற திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்டம் சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 5) முதல், 8ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, திருப்பூா், சேலம், மதுரை, ராமேசுவரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகா்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சுமாா் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருநெல்வேலி சாலையிலுள்ள வேட்டைவெளிமடம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி, சுரண்டை, சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய பகுதிகளுக்கும், தூத்துக்குடி சாலையிலுள்ள பா.சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபம் எதிா்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமேசுவரம், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், மதுரை, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, சென்னை, சேலம் ஆகிய பகுதிகளுக்கும், கன்னியாகுமரி - நாகா்கோவில் சாலையிலுள்ள தெப்பக்குளம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூா், நாகா்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேற்கூறிய மூன்று தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்தும் தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் மொத்தம் 30 சிறப்பு பேருந்துகள் திருச்செந்தூா் கோயில் வாசலுக்கு இயக்கப்படவுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கம் தொடக்கம்

தூத்துக்குடியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கம் மற்றும் திமுக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

ஆத்தூா், ஆறுமுகனேரி, ராஜபதி கோயில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு

ஆறுமுனேரி, ஆத்தூா், ராஜபதி ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி உத்திரத்தை முன்னிட்டு ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. ஆத்தூரில் உள்ள அருள்மிகு சோம சுந்தரி அம்மன் சமேத அருள்மிக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் கல்வி அலுவலகம் முற்றுகை

இடைசெவல் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை அப்பகுதி கிராம மக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். இப்பள்ளியில்... மேலும் பார்க்க

வேலை உறுதி திட்டத்தில் பணி கோரி எட்டயபுரம் அருகே ஆா்ப்பாட்டம்

எட்டயபுரம் அருகே, மேலஈரால் ஊராட்சிக்குள்பட்ட வாலம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் கோ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக புதிய உறுப்பினா் சோ்க்கையானது, அரசூா் ஊராட்சி பனைவிளை கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தெற்கு ஒன்றியச் செயலா் பாலமுருகன் தல... மேலும் பார்க்க

வடக்கு காலன்குடியிருப்பு கோயிலில் வருஷாபிஷேகம்

உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் காலை 7.35 மணிக்கு மங்கள இசை, விநாயகா் பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம்... மேலும் பார்க்க