தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70 போ் மருத்துவ படிப்புகளில் ...
திருச்செந்தூர் குடமுழுக்கு: கடற்கரை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்; தற்போதைய நிலவரம் என்ன?
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள், ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் கடல் அரிப்பினைத் தடுத்திடும் வகையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
வரும் ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.

இதற்காக ராஜகோபுர வாசல் அருகில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள 76 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 64 ஓதுவா மூர்த்திகளைக் கொண்டு பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் மற்றும் விமான கும்பாபிஷேகத்திலும் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறுகிறது.
ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கிற்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், திருச்செந்தூர் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோயிலில் கிரிப்பிரகாரப்பாதை சீரமைப்பு, கடற்கரை சீரமைப்பு, கடல் அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

18 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், தற்காலிக பேருந்து நிலையம், கோயில் வளாகத்தில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 314 கழிவறைகளுடன் கூடுதலாக 510 கழிப்பிடங்கள், 30 இடங்களில் குடிநீர் வசதிகள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள 60 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
ட்ரோன்கள் மூலம் 20 இடங்களில் புனித நீர் தெளிக்கப்பட உள்ளன.