செய்திகள் :

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

post image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தையொட்டி திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 4 மணியளவில் கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்திகள் வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.20 மணிக்கு திருக்கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய ஹ.முத்துக்குமாரசாமி பட்டர் மாசித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினார்.

தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள், அலங்காரமாகி காலை 6.40 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டியன், திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் நாகவேல் உள்ளிட்ட பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன், திரிசுதந்திரப்பெருமக்கள், செந்தில்முருகன் தேவார சபையினர்கள், பக்த கோடிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வருகின்ற மார்ச் 12ம் தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 4.40 மண... மேலும் பார்க்க

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள ஒரு தனியார் மர... மேலும் பார்க்க

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க