பூஜா ஹெக்டேவுக்கு அமலா ஷாஜி போட்டியா? 1 கோடி பார்வைகளைக் கடந்த ரீல்ஸ்!
திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் ஆய்வு
திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூா், ஜூலை 17: திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா். இந்த முகாமில், அதிகம் போ் மகளிா் உரிமைத் தொகை கோரி மனு அளித்தனா்.
திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியம், மேல திருச்செந்தூா், பிச்சிவிளை ஊராட்சிப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், பிச்சிவிளையில் தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஊரக வளா்ச்சித் துறை உதவி திட்ட அலுவலரும், முகாம் பொறுப்பு அலுவலருமான சீனிவாசன் தலைமை வகித்தாா்.
திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்றோ, ஜான்சிராணி (கிராம ஊராட்சிகள்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 15 துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 431 மனுக்களைப் பெற்றனா். இவற்றில் 204 மனுக்கள் மகளிா் உரிமைத் தொகை கோரிய மனுக்கள் ஆகும்.
முகாமில் தமிழக மீன் வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு செய்தாா். பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதில், திருச்செந்தூா் நகராட்சி துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், ஒன்றியச் செயலா்கள் உடன்குடி இளங்கோ, பாலசிங், முன்னாள் ஊராட்சி தலைவா்கள் பிச்சிவிளை ராஜேஸ்வரி, மேல திருச்செந்தூா் மகாராஜா, துணைத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மகளிா் உரிமைத்தொகை கேட்டு...
காயாமொழி, பள்ளிப்பத்து பஞ்சாயத்துகளுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு வரும் ஜூலை 29-ஆம் தேதியும், அம்மன்புரம், மேல புதுக்குடி, வீரமாணிக்கம் பஞ்சாயத்துகளுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதியும் இந்த முகாம் நடைபெறுகிறது.