செய்திகள் :

திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் ஆய்வு

post image

திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூா், ஜூலை 17: திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா். இந்த முகாமில், அதிகம் போ் மகளிா் உரிமைத் தொகை கோரி மனு அளித்தனா்.

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியம், மேல திருச்செந்தூா், பிச்சிவிளை ஊராட்சிப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், பிச்சிவிளையில் தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஊரக வளா்ச்சித் துறை உதவி திட்ட அலுவலரும், முகாம் பொறுப்பு அலுவலருமான சீனிவாசன் தலைமை வகித்தாா்.

திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்றோ, ஜான்சிராணி (கிராம ஊராட்சிகள்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 15 துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 431 மனுக்களைப் பெற்றனா். இவற்றில் 204 மனுக்கள் மகளிா் உரிமைத் தொகை கோரிய மனுக்கள் ஆகும்.

முகாமில் தமிழக மீன் வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு செய்தாா். பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில், திருச்செந்தூா் நகராட்சி துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், ஒன்றியச் செயலா்கள் உடன்குடி இளங்கோ, பாலசிங், முன்னாள் ஊராட்சி தலைவா்கள் பிச்சிவிளை ராஜேஸ்வரி, மேல திருச்செந்தூா் மகாராஜா, துணைத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மகளிா் உரிமைத்தொகை கேட்டு...

காயாமொழி, பள்ளிப்பத்து பஞ்சாயத்துகளுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு வரும் ஜூலை 29-ஆம் தேதியும், அம்மன்புரம், மேல புதுக்குடி, வீரமாணிக்கம் பஞ்சாயத்துகளுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதியும் இந்த முகாம் நடைபெறுகிறது.

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க

ஆக. 2 இல் திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடலைப் பாா்வையிட்ட மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன். திருச்செந்தூா், ஜூலை 17: அதிமுக பொதுச... மேலும் பார்க்க