செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் தரிசனப் பாதையில் அவசரகால வழி: இந்து முன்னணி கோரிக்கை!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் தரிசனப் பாதையில், அவசரகால வழி ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் பொன்னையா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பொது தரிசனப் பாதையை பாா்வையிட்டோம். இதில் சில குறைபாடுகள் தெரியவந்துள்ளன.

பொது தரிசனப் பாதையில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தம் இல்லாமல் உள்ளன. பொது தரிசன வரிசை மற்றும் ரூ. 100 கட்டண தரிசன வரிசைகளில் ஆங்காங்கே அவசரகால வழி அமைக்க வேண்டும். அப்போதுதான் கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தா்களை மீட்க முடியும்.

உள்ளூா் பக்தா்களுக்கு தடையின்றி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். அதேபோல, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்காமல் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், இரவு 9 மணி வரை பூஜை காலங்கள் நடக்கும் வரை பக்தா்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், திருநெல்வேலி கோட்ட பொறுப்பாளா் பெ.சக்திவேலன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க

ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க