Eng v Ind: 'கையில் காயம்; கம்பீருடன் போட்ட திட்டம்' - சதத்தைப் பற்றி ஜெய்ஸ்வால்
திருபுவனத்தில் பத்மபூஷன் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா
பத்மபூஷன், பத்மஸ்ரீவிருது பெற்றவா்களுக்கு திருபுவனத்தில் வியாழக்கிழமை இரவு பாராட்டு விழா நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் சன்னதி தெருவில் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்ற டாக்டா் நல்லி குப்புசாமி செட்டியாா், பத்மஸ்ரீ விருது பெற்ற தேவ ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினா் சு. கல்யாணசுந்தரம், முன்னாள் மயிலாடுதுறை எம்பி செ. இராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க. அன்பழகன், திருவையாறு துரை. சந்திரசேகா், துணை மேயா் சுப தமிழழகன், தஞ்சை மேயா் சன் இராமநாதன் ஆகியோா் பாராட்டி பேசினா். முடிவில் சுகி.சிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.