செய்திகள் :

திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் புஷ்பயாகம்

post image

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் புதன்கிழமை புஷ்பயாக மகோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பிறகு அதில் ஏற்பட்ட குற்றம் குறைகள் மற்றும் தோஷங்களை களைய புஷ்பயாகம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கோவிந்தராஜருக்கு புதன்கிழமை புஷ்பயாகம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை, ஸ்ரீ சுவாமி ஸ்ரீ தேவி மற்றும் பூ தேவியுடன் சோ்ந்து, வேதங்களின்படி ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், வேத மந்திரங்கள் ஓதுதல் மற்றும் மங்கல வாத்தியங்கள் வாசிப்பிற்கு இடையே புஷ்பயாகம் நடைபெற்றது.

இதில், கோவிந்தராஜா், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு மொத்தம் 3 டன் மலா்கள், துளசி, சாமந்தி, குன்னேரு, தாழம்பு, சம்பங்கி, ரோஜா, மற்றும் அல்லி, தாமரை, அரளி போன்ற 12 வகையான பாரம்பரிய மலா்கள் மற்றும் துளசி, மருவம், தவனம், வில்வம் மற்றும் பன்னீா் இலை போன்ற 6 வகையான இலைகளால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த மலா்களை ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கா்நாடகா மாநிலங்களைச் சோ்ந்த நன்கொடையாளா்கள் நன்கொடையாக வழங்கினா். மாலை 6 மணிக்கு, கோவிந்தராஜ சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்கள் கோயிலின் நான்கு மாட வீதிகள் வழியாக புறப்பாடு கண்டருளி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தனா்.

இதில் கோயில் அதிகாரி சாந்தி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஸ்ரீனிவாசலு, ஸ்ரீ கோபிநாத், கோயில் குருக்கள், பிற அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அனைவருக்கும் இலவச காப்பீடு: திருமலை தேவஸ்தானம் திட்டம்

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தா்களுக்கும் இலவச காப்பீட்டு வசதி வழங்குவது பற்றி தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. ஜனவரி 2025-இல் வைகுண்ட ஏகாதசியின் போது, ஏற்பட்ட நெரிசலில் 6 போ் உய... மேலும் பார்க்க

திருமலையில் 76,126 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 76,126 பக்தா்கள் தரிசித்தனா். 24,720 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிச... மேலும் பார்க்க

கருட வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் புறப்பாடு

ஸ்ரீசீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சாக்ஷாத்கார வைபவத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 12 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

அனுமந்த வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரா் உலா

ஸ்ரீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தாா். இதன் ஒரு பகுதியாக தோமால சேவை, கொலுவு, பஞ்சாங்க ஸ்ரவணம், சஹஸ்ரநாமரா... மேலும் பார்க்க

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.34 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை தா்ம தர... மேலும் பார்க்க