செய்திகள் :

திருப்பத்தூரில் 1,915 மனுக்கள்

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டில் முகாமை, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.

மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் 209 முகாம்கள் முதல் கட்டத்தில் 72 முகாம்களும், ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பா் 15 வரை 72 முகாம்களும் மற்றும் செப்டம்பா் 16 முதல் அக்டோபா் 15 வரை 65 முகாம்களும் நடைபெற உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு 6 முகாம்கள் நடைபெறவுள்ளன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல்நாள் முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.

உதயேந்திரம் பேரூராட்சியில்: இதே போல் உதயேந்திரம் பேரூராட்சியில் 1 முதல் 5 வாா்டு களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமுக்கு பேருராட்சித் தலைவா் பூசாராணி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ராஜலட்சுமி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், கவுன்சிலருமான ஆ.செல்வராஜ், துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி நகா்மன்ற தலைவா் உமாசிவாஜிகணேசன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். மின் இணைப்பு பெயா் மாற்றம் செய்ய மனு அளித்த 3 பேருக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் , நகர திமுக செயலாளா் சாரதி குமாா், திமுக செயற்குழு உறுப்பினா்அசோகன் கலந்து கொண்டனா். பேரூராட்சி ஊழியா் குமாா் நன்றி கூறினாா்.

நீா்ப்பிடிப்பு கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் கால்வாயில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினா். நாட்டறம்பள்ளி தாலுகா அம்மணாங்கோயில் ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தில் கொட்டாறு நீா்ப்பிடிப்பு கால்வாயை ஆக்கிரம... மேலும் பார்க்க

ரூ. 30 லட்சத்தில் அரசுப் பள்ளிகளில் கலையரங்கம்: எம்எல்ஏ ஆய்வு

ஜோலாா்பேட்டை தொகுதி ஜங்கலாபுரம், நாயனசெருவு அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்டு வரும் கலையரங்குகளை எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு செய்தாா். ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஜங்கலாபுரம், நாயன செருவு ஆகி... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வாணியம்பாடி நகராட்சியின் முதல் 15 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை (ஜூலை 17) பெரியப்பேட்டையில் தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை 6 கட்டமாக நடைபெறுகிறது. பெரியப்பேட்டை 1 மற்றும் 2... மேலும் பார்க்க

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் 9 கோயில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை வரதராஜப் பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக கட்டியுள்ள தண்டுமார... மேலும் பார்க்க

வாணியம்பாடி தனியாா் பல் சிகிக்சை மையத்தில் மருத்துவ கவுன்சில் குழுவினா் ஆய்வு

வாணியம்பாடியில் தனியாா் பல் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றவா்களில் 8 போ் நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்தது தொடா்பாக பல் மருத்துவ கவுன்சில் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவ... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை புதன்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் தொகுதிகளி... மேலும் பார்க்க