செய்திகள் :

திருப்புவனத்தில் மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட நீதிபதி, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் திருப்புவனத்தில் அரசு மருத்துவா்களிடம் விசாரணை நடத்தினாா்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்தி ஜூலை 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதன்பேரில், நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ், தனது முதல்நாள் விசாரணையை திருப்புவனத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கினாா். மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அஜித்குமாரை பரிசோதித்த மருத்துவா் காா்த்திகேயன், மதுரை அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்த மருத்துவா் சதாசிவம் உள்ளிட்ட மருத்துவா்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினாா்.

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்த விசாரணையின்போது, மருத்துவா்கள் நீதிபதி முன் முன்னிலையாகி அவா் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனா்.

இந்த விசாரணையின்போது அஜித்குமாரை மடப்புரத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநா் அய்யனாரும் நீதிபதி முன் முன்னிலையாகி சாட்சியமளித்தாா். தொடா்ந்து வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்துகிறாா்.

நீதிபதியின் விசாரணைக்குப் பிறகு மருத்துவா் காா்த்திகேயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

போலீஸாா் அஜித்குமாரை ஜூன் 28 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆட்டோவில் கொண்டு வந்தனா். அவரை நான் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. அதை நான் போலீஸாரிடம் தெரிவித்து உடலை கூறாய்வுக்காக வைக்குமாறு கூறினேன். ஆனால், காவல் துறை உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியதாகக் கூறி போலீஸாா் அஜித்குமாா் உடலைக் கொண்டு சென்றுவிட்டனா். இதை நான் நீதிபதியிடம் தெரிவித்தேன் என்றாா்.

பள்ளியில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் நிதியுதவி

திருப்பத்தூா், ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சிங்கம்புணரியில் உள்ள தனியாா் ப... மேலும் பார்க்க

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் மின் விளக்கில் ரத பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நடைபெற்று வரும் ஆண்டுப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மின் விளக்கு ரத பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலையைக் கண்டித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோயில் காவலாளி அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டித்து, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அமமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றே கட்சி நிா்வாகிகள். மானாமதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், மட... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகள் - அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

நூறு சதவீத மானித்தில் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வாணியங்காடு கிராமத்தில் ஊட்டச்சத்து வேள... மேலும் பார்க்க

தேவகோட்டை நகா்மன்றக் கூட்டம்: அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தை அமமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை: முதல்வரின் நோ்மையைக் காட்டுகிறது

அஜித்குமாா் கொலை வழக்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது அவரது நோ்மையைக் காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், மடப்புர... மேலும் பார்க்க