செய்திகள் :

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு!

post image

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கோகுல் தாக்கல் செய்த மனு :

திருபுவனம் பேரூராட்சியில் புகழ் வாய்ந்த ஸ்ரீகம்பஹரேஸ்வா் கோயில் உள்ளது. கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், திருபுவனம் பேரூராட்சி வாா்டு எண் 10-இல்

1.43 கோடியில் கோயில் சந்நிதி பாதையில் பாதசாரிகள் நடைபாதை, மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திட்டப் பணிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதையை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஒப்பந்ததாரா் நடைபாதையில் உள்ள மின் கம்பங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இவ்வாறு சாலைப் பணிகள் மேற்கொண்டால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே, சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி முறையாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டும் என அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திட்ட மதிப்பீட்டின்படி முறையாக சாலைப் பணிகள் அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருபுவனம் பேரூராட்சியில் நடைபெறும் சாலை திட்டப் பணிகள் உரிய விதிகளை பின்பற்றி தரமாக சாலை அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் பணிகள் முறையாக நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

​​​​​​​கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மெய்கிழாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ராகவேந்திரன் (47). மின் பழுது நீக்கும் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த ச... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது: பெ.சண்முகம்

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள்: ஒப்பந்ததாரா்கள் செலுத்திய வரிகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சா் அறிவுறுத்தல்

கடந்த 4 ஆண்டுகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா்கள் அரசுக்கு செலுத்திய, செலுத்த வேண்டிய வரிகள் குறித்து வணிக வரித் துறை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என வணிக வரி, பதிவுத் துறை அமை... மேலும் பார்க்க

இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு ரத்து

ஐஏஎஸ் அதிகாரிகள் வள்ளலாா், காமராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தமிழகத்தில் கூட்டுறவ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 6,613 மனுக்களுக்குத் தீா்வு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட 6,613 மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மேற்கு ஊராட்சி ஒன்... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம் மதுரையில் நாளை திமுக அமைதிப் பேரணி

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை (ஆக. 7) அமைதிப் பேரணி நடைபெறுகிறது.இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி... மேலும் பார்க்க