செய்திகள் :

திருப்பூர்: செல்போனில் கேம் விளையாடியதை எச்சரித்த தாய்; சிறுவன் எடுத்த விபரீத முடிவு; என்ன நடந்தது?

post image

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார்.

பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்ததும் தனது தந்தை அல்லது தாயின் செல்போனை எடுத்து கேம் விளையாடுவது அல்லது வீடியோக்கள் பார்ப்பது வழக்கமாகக் கொண்டுள்ளார் சிறுவன்.

அதுபோலவே, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தனது தாயின் செல்போனை எடுத்து கேம் விளையாடி உள்ளார். அப்போது, அச்சிறுவனின் மூன்று வயது சகோதரர் அழுவததைக் கூட கண்டுக்கொள்ளாமல் சிறுவன் செல்போனில் மூழ்கிக் கிடந்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த சிறுவனின் தாய், தம்பி அழுவது கூட தெரியாமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறாய் என அவரைத் திட்டியதுடன், செல்போனையும் பிடுங்கியுள்ளார்.

suicide
suicide

இதனால் மனமுடைந்த சிறுவன் முருங்கை மரத்துக்குப் பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தார். மயக்கமடைந்த சிறுவனை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அலங்கியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கரூர்: 'ரௌடியை பிடிக்க முயன்ற போலீஸ்; தாக்கிவிட்டு ஓடியதால் சுட்டுப் பிடிப்பு!' - நடந்தது என்ன?

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்த பென்சில் தமிழழகன்(வயது: 30). இவர்மீது கரூரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பல பதிவாகியுள்ளன. இதனால் இவர் ரௌடி பட்ட... மேலும் பார்க்க

கோவை அரபிக் கல்லூரி மூலம் ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: மேலும் 4 பேர் கைது - பின்னணி என்ன?

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு கார் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இ... மேலும் பார்க்க

கோவை: புலம்பெயர் தொழிலாளிகளை மிரட்டி பணம் பறிப்பு; ஆட்டோ ஓட்டுநர்கள் கைதின் பின்னணி என்ன?

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். உத்தரப்பிரதேச... மேலும் பார்க்க

``கோயில், குளம் என சுற்றுகிறாள், சரியாக கவனிக்கவில்லை ஆத்திரத்தில்..'' - மகளை கொன்ற 78 வயது தந்தை

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவரது பராமரிப்பில் அவரது தந்தை வேலு இருந்து வந்துள்ளா... மேலும் பார்க்க

திருப்பூர்: போலி ஆதார் அட்டையுடன் தங்கியிருந்த 26 வங்கதேசத்தினர் கைது; பின்னணி என்ன?

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாகப் பின்னலாடை வர்த்தகத்தில் வங்கதேசம் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் துறையாக பின்னலாடைத் துறை விளங்கி வருகிறது.இருந்தாலும், போதிய ஊதியம் கிடைக்காததால்... மேலும் பார்க்க

தேனிலவில் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற சோனம்; 3 மொபைல்கள் எங்கே? விசாரணையில் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனம் என்ற பெண் கடந்த மாதம் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். சென்ற இடத்தில் கூலிப்படையின் துணையோடு கணவனை கொலை செய்து உடலை பள்ளத்தில் தூக்கிப்போட்... மேலும் பார்க்க