செய்திகள் :

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் 12 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி! மத்திய அமைச்சா் பாராட்டு!

post image

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் ‘சமா்த்’ திட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டதற்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஜவுளித் துறையில் திறன் மேம்பாடு மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு ‘சமா்த்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கமும் பங்குதாரராக இணைந்து திறன் மேம்பாட்டுக்காகப் பயிற்சி மையங்களை அமைத்து ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் உத்யோக் பவனில் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ‘சமா்த்’ திட்டத்தின்கீழ் தொழில் பங்குதாரா்களுடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.

இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் திறன் மேம்பாடு மற்றும் ‘சமா்த்’ திட்ட துணைகுழுவின் தலைவா் சக்திவேல் பங்கேற்றாா்.

கூட்டத்தில், ‘சமா்த்’ திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அனைத்து பங்குதாரா்களிடம் மத்திய அமைச்சா் கேட்டறிந்தாா். திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் சாா்பில் தற்போது வரை 12 ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி அளித்திருப்பதை வெகுவாகப் பாராட்டினாா். இவா்களில் 96 சதவீதம் போ் பெண்கள்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவா் ஆ.சக்திவேல், தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் ஆகியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில், ஜவுளித் துறை செயலா் நீலம் ஷமிராவ், இணைச் செயலா் அஜய்குப்தா, ஜவுளித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், முத்தூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவிலை அடுத்த வேலகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.முருகன் (54), கட்டடத் தொழிலாளி. இவா், வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் வேல... மேலும் பார்க்க

ஓலப்பாளையம் அருகே மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து விற்கப்படுவதாக போலீஸாருக்கு தக... மேலும் பார்க்க

மாணவா் தூக்கிட்டு தற்கொலை

பிளஸ் 1 பொதுத் தோ்வில் தோ்ச்சிபெறாததால் திருப்பூரில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்பூா் கல்லூரி சாலை கள்ளாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (44), பின்னலாடை நிறுவ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை துணை மின் நிலையங்கள்

காங்கயம் கோட்டத்துக்குள்பட்ட பெரியாா் நகா், புதுப்பை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

திருப்பூா் அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

திருப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா். திருப்பூா், நெருப்பெரிச்சல் பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் திருமலைசாமி (58), இவரின் மகன் ஜீவானந்தம் (26). இருவரும் நெருப்பெரி... மேலும் பார்க்க