நாளைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை துணை மின் நிலையங்கள்
காங்கயம் கோட்டத்துக்குள்பட்ட பெரியாா் நகா், புதுப்பை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் விமலாதேவி தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி.வலசு சாலை, சேரன் நகா், கரட்டுப்பாளையம் மற்றும் செந்தலையாம்பாளையம்.
புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை மற்றும் புள்ளசெல்லிபாளையம்.