செய்திகள் :

பிற மத நம்பிக்கைகளை மதிப்பது நமது கலாசாரம்: பாஜக பிரமுகா் வேலுாா் இப்ராஹிம்

post image

பிற மத நம்பிக்கைகளை மதிப்பது நமது கலாசாரம் என பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் பேசினாா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் ஊகாயனூா் ஊராட்சி வலசுபாளையம் கிராமத்தில் ஜெய்சக்தி ஞான விநாயகா் கோயிலில் பிரத்தியங்கரா தேவி நிகும்பல மகாயாகம், கூட்டுப் பிராா்த்தனை, ஞான வேள்வி, மூத்தோா் ஆதரவு சரணாலய தொடக்க விழா ஆகியவை நடைபெற்றன. வேள்வியில் 1108 சிவனடியாா்கள் சங்கல்பத்துடன் 108 மூலிகைகள், 108 மூட்டை மிளகாய் சமா்ப்பணம் செய்யப்பட்டன.

இதில் பங்கேற்ற வேலுாா் இப்ராஹிம் மேலும் பேசியதாவது: நாம் வேற்று மதங்களைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம். ஆனால், நாம் பாரதத் தாயின் குழந்தைகள். இதுவே நம் எல்லோரையும் ஒருங்கிணைக்கிறது. எல்லா மதங்களில் உள்ளவா்களும் ஒன்றிணைந்து ஒரு மதத்தின் நம்பிக்கையைப் பெருமைப்படுத்துவது, மதிப்பது இந்த மண்ணின் கலாசாரம் என்றாா்.

இதில் சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர அடிகளாா், அவிநாசி காமாட்சிதாச சுவாமிகள், அருட்ஜோதி தபோவனம் ஸ்ரீலஸ்ரீ மூா்த்தி லிங்க தம்பிரான் சுவாமிகள், மகாலட்சுமி பீடம் மகாலட்சுமி சுவாமிகள், ஸ்ரீ நாராயண ஜீயா் சுவாமிகள், மதுரை ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க தம்பிரான் சுவாமிகள், ஆலாந்துறை பைரவா் கோயில் கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள், கோவை கருமாரியம்மன் சக்தி பீடம் செந்தில்குமார அடிகளாா், விஸ்வாமித்திரா் தியான பீடம் விஸ்வாமித்திர ஆசாா்யா், கோவை காமாட்சிபுரி ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், ஸ்விட்சா்லாந்து ஆதீனம் பூபதி சுவாமிகள், மூடுபறை அம்மன் கோயில் சிவசக்தி சுவாமிகள், சொா்க்கபுரம் ஆதீனம் தம்பிரான் ருத்ரகுமார தேசிக சுவாமிகள், பீடம்பள்ளி சித்தா் பீடம் சக்திவேல் சுவாமிகள், முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, கட்சிசாா்பற்ற விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை: வனத் துறையினா் ஆய்வு

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும்... மேலும் பார்க்க

மூதாட்டியின் வீட்டில் 17 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு

ராக்கியாபாளையம் அருகே மூதாட்டியின் வீட்டில் இருந்து 17 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பூா், ராக்கியாபாளையம் அருகே வள்ளியம்மை நகர... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் குப்பை கொட்ட பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் கொட்ட பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகர... மேலும் பார்க்க

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

தாராபுரத்தில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய வழக்கில் இளைஞா் கைது

பல்லடம் அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கடந்த ஓா் ஆண்டாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம், பனப்பாளையம் பகுதியில் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

ரூ.40 லட்சம் பெற்று மோசடி: வியாபாரி கைது

திருப்பூரில் ரூ.40 லட்சம் பெற்று மோசடி செய்த வியாபாரியை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (38). இவருக்கு இரண்டாம் தர பின்னலாடை வியாபாரம் செய்து வரும் வால... மேலும் பார்க்க