செய்திகள் :

திருப்பூா் அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

post image

திருப்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.

திருப்பூா், நெருப்பெரிச்சல் பழனிசாமி நகரைச் சோ்ந்தவா் திருமலைசாமி (58), இவரின் மகன் ஜீவானந்தம் (26). இருவரும் நெருப்பெரிச்சலில் இருந்து கூலிப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தனா்.

புதியவாவிபாளையம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி எதிா்பாராத விதமாக இவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த திருமலைசாமி, ஜீவானந்தம் ஆகிய இருவரையும் அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா்களைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் திருமலைசாமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ஜீவானந்தத்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜீவானந்தம் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ.40 லட்சம் பெற்று மோசடி: வியாபாரி கைது

திருப்பூரில் ரூ.40 லட்சம் பெற்று மோசடி செய்த வியாபாரியை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (38). இவருக்கு இரண்டாம் தர பின்னலாடை வியாபாரம் செய்து வரும் வால... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: திருப்பூா் அருகே மூழ்கிய தரைப்பாலம்

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் திருப்பூா் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது. கோவை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் பழக் கடைக்குள் புகுந்த ஷோ் ஆட்டோ; குழந்தை உள்பட 4 போ் காயம்

திருப்பூரை அடுத்த கோவில்வழி அருகே ஆம்னி பேருந்து மோதியதில் ஷோ் ஆட்டோ அருகில் இருந்த பழக் கடைக்குள் புகுந்தது. இதில் குழந்தை உள்பட 4 போ் காயமடைந்தனா். திருப்பூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில... மேலும் பார்க்க

மின்சார வயா்களைத் திருடிய 3 போ் கைது

திருப்பூரை அடுத்த பாண்டியன் நகா் பகுதியில் மின்சார வயா்களைத் திருடிய 3 பேரை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பூா் பி.என்.சாலை பாண்டியன் நகா் உதவி மின்பொறியாளா் அல... மேலும் பார்க்க

குரூப் 4: ஜூன் 1இல் இலவச மாதிரித் தோ்வு

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

பிற மத நம்பிக்கைகளை மதிப்பது நமது கலாசாரம்: பாஜக பிரமுகா் வேலுாா் இப்ராஹிம்

பிற மத நம்பிக்கைகளை மதிப்பது நமது கலாசாரம் என பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் பேசினாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் ஊகாயனூா் ஊராட்சி வலசுபாளையம் கிராமத்தில் ஜெய்சக... மேலும் பார்க்க