செய்திகள் :

`திருமணத்திற்கு மறுப்பு' - காதலி வீட்டு முன் தூக்கிட்ட கேரள இளைஞர்; விஷம் குடித்த பெண்

post image

கேரள மாநிலம் கொல்லம் பாருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயின் மகன் ஜிதின். ஜிதினின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஜிதினின் தாத்தா அங்கு உள் நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சைபெற்றார். அப்போது அந்த மருத்துவமனையைச் சார்ந்த நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் ஜிதினுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. மாணவி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

தற்கொலை செய்துகொண்ட ஜிதின்

இந்த நிலையில், நர்சிங் மாணவிக்கு திருமணத்துக்காக பெற்றோர் வேறு வரன் பார்த்தனர். இதற்கிடையே நர்சிங் மாணவியின் காதலனான ஜிதின் காதலி வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். அதற்கு நர்சிங் மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நர்சிங் மாணவிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த ஜிதின் காதலி வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியினர் அதைப்பார்த்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று ஜிதினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

ஜிதின் தூக்கில் தொங்குவதை பார்த்த நர்சிங் மாணவி குளியலறைக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மாணவியை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜிதினின் அண்ணன் ஜோபின் ஜெபி மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க

கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை - பள்ளி மாணவர்கள் உதவியோடு உடலை காட்டில் எரித்த பெண் பிரின்சிபால்

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் எரிந்து கிடந்... மேலும் பார்க்க

அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்னணி என்ன?

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, க... மேலும் பார்க்க