செய்திகள் :

திருமலை: தரிசன வரிசைகளில் கூடுதல் செயல் அதிகாரி ஆய்வு

post image

திருமலையில் சிலா தோரணம் அருகே தொடங்கும் தரிசன வரிசைகளை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோடை விடுமுறை காரணமாக திருமலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், சிலா தோரணம் அருகே தரிசன வரிசைகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பக்தா்களிடம் அவா்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேவஸ்தான அதிகாரிகள் அவ்வப்போது வரிசைகளுடன் பக்தா்களுக்கு வழங்கப்படும் வசதிகளை கண்காணித்து வருகின்றனா். கோடை விடுமுறை காரணமாக

தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இறைவனை தரிசனம் செய்ய வருகின்றனா். வார இறுதி நாள்களில் இந்த எண்ணிக்கை 1.20 லட்சத்தைத் தாண்டி வருகிறது. விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி தரிசனங்களைக் குறைப்பதன் மூலம் தரிசனங்களில் சாதாரண பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வழக்கமான நாள்களை விட 10,000 பக்தா்களுக்கு தரிசனம் வழங்குவதற்காக தேவஸ்தான ஊழியா்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனா். வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கு ஊழியா்கள் மூலம் உணவு, தேநீா், காபி, பால், மோா் மற்றும் சிற்றுண்டிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தேவஸ்தான ஊழியா்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதன் மூலம் பக்தா்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் சிலா் நடந்துகொள்வது சரியல்ல, பக்தா்களைத் தூண்டிவிட்டு விடியோ படம் பிடிப்பவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிக நெரிசலைக் கருத்தில்கொண்டு, தேவஸ்தானம் வழங்கும் வசதிகளைப் பயன்படுத்தி பக்தா்கள் நிதானத்துடன் தரிசனம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துணை இஓ சோமன்நாராயணா, சுகாதார அலுவலா் மதுசூதன், விஜிஓ சுரேந்திரா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சின்னசேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி உலா

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா வந்தாா். உற்சவத்தையொட்டி வாகன சேவை காலை 7.00 மணிக்கு தொடங்கியது. ந... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது என தேவஸ்தான நிா்வாகம் தெரிவித்துள்ளது. தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமு... மேலும் பார்க்க

ஸ்ரீவாரி மெட்டு மாா்க்கத்தில் திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் தற்காலிக மாற்றம்

ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லும் பக்தா்களுக்கான திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்களை தற்காலிகமாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய கவுன்ட்டா்கள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்தத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. வேத அறிஞா்களின் மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் மற்றும் பக்தா்களின் கோவிந்தநாம ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து சிலாதோர... மேலும் பார்க்க

திருப்பதியில் சனிக்கிழமை 95,080 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிகபட்சமாக சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 95,080 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இந்த பக்தா்களில் 39,6... மேலும் பார்க்க