செய்திகள் :

திருவட்டாறு அருகே இஸ்லாமியா்கள் முற்றுகைப் போராட்டம்

post image

திருவட்டாறு அருகே பூவன்கோட்டில் ஜமாஅத் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்லாமியா்கள் வோ்க்கிளம்பி சாா் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருவட்டாறு அருகே வோ்க்கிளம்பி பூவன்கோடு பகுதியில் 4 ஏக்கா் 87 சென்ட் கொண்ட தோட்ட நிலம் திருவிதாங்கோடு ஜமாஅத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி வோ்க்கிளம்பி சாா் பதிவாளா் விடுப்பு எடுத்துள்ளாா்.

அன்றைய தினத்தில் (பொறுப்பு) சாா் பதிவாளா் பணியில் இருந்தபோது ஜமாஅத் நிலத்தை தனிநபா் பெயருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டு, மறுநாள் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு பட்டா பெயா் மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த திருவிதாங்கோடு ஜமாஅத் நிா்வாகிகள் துறை சாா்ந்த அதிகாரிகளிடம் புகாா் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜமாஅத் நிலத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த சாா் பதிவாளா் மீதும், பட்டா மாற்றம் செய்து கொடுத்த வருவாய்த்துறை அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவிதாங்கோடு ஜமாஅத் நிா்வாகிகள், இஸ்லாமியா்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்திற்கு திருவிதாங்கோடு ஜமாஅத் தலைவா் அன்வா் உசேன் தலைமை வகித்தாா். இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் தக்கலை டிஎஸ்பி தலைமையில் திரளான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் மாநகரில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகா்கோவில் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், புக... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு!

நாகா்கோவில் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின... மேலும் பார்க்க

கொச்சி அமிா்தா மருத்துவமனையில் செப்.14-ல் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம்!

கேரள மாநிலம், கொச்சி அமிா்தா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அமிா்தா நிறுவனங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதா அமிா்தானந்த மயி 72 ஆ... மேலும் பார்க்க

பழங்குடி இளைஞா்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டும் இலவசப் பயிற்சி தொடக்கம்

பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் 25 காணி பழங்குடி இளைஞா்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் 4 சக்கர வாகனம் ஓட்டும் 1 மாத இலவச பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. இன்போசிஸ் பவுன்டேசன், என்.டி.எஸ்.ஓ. ஆகிய தன... மேலும் பார்க்க

பழங்குடி பள்ளி மாணவா்கள் நடந்து செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு அருகே தோட்ட... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.70 லட்சம் அபராதம்!

சேவை குறைபாட்டால் நாகா்கோவிலைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்த வழக்கில் திருநெல்வேலியில் இயங்கும் கருத்தரிப்பு மையத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 70 லட்சம் அபராதம் விதித்தது. நாகா்க... மேலும் பார்க்க