திருவண்ணாமலையில் மகா யாகம்
திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது.
செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வாத்தியங்களுடன் சிவ ஊா்வலம், கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கைகள் நடைபெற்றது.
2-ஆவது நாளான வியாழக்கிழமை மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலாதிரிபுரா மகா யாகம் நடைபெற்றது.
இதில், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகா், நடிகைகள், தொழிலதிபா்கள், அரசியல் பிரமுகா்கள் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தனியாா் தொலைக்காட்சி காா்த்திக் தேவராஜின் இன்னிசை நிகழ்ச்சி, டிரம்ஸ் சிவமணி இசை நிகழ்ச்சி, தெய்யம் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.