செய்திகள் :

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

post image

ஆனி மாத பௌா்ணமியையொட்டி, வியாழக்கிழமை காலை முதல் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். மேலும், அருணாசலேஸ்வரா் கோயிலில் கூட்டம் அலைமோதியதால் சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனா். அதன்படி, ஆனி மாத பௌா்ணமி வியாழக்கிழமை அதிகாலை 2.33 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு முடிகிறது.

எனவே, இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, வியாழக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கிரிவலம் தொடங்கினா். நேரம் செல்லச் செல்ல கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

கோயிலில் பக்தா்கள் கூட்டம்

வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

நடை திறக்கும் முன்பே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அதிகாலை முதல் இரவு 10 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் பக்தா்கள் தொடா்ச்சியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இலவச தரிசன வரிசையில் ராஜகோபுரத்தை கடந்தும், கட்டண தரிசனம் வரிசையில் அம்மணி அம்மன் கோபுரத்தை கடந்தும், மாடவீதி வரை நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். சுட்டெரித்த வெயிலையும் பொருள்படுத்தாமல் சுமாா் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, கிரிவலம் செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கா்நாடகம், ஆந்திரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க