செய்திகள் :

திருவள்ளூர் மாவட்டத்துக்கு 36வது இடம்! பத்தாம் வகுப்பில் 89.60% தேர்ச்சி!

post image

திருவள்ளூர்: தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் கடந்தாண்டை விட 3.76 சதவீதம் அதிகம் என்பதோடு, மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல் வரையில் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 440 பள்ளிகளை உள்ளடங்கிய 147 தேர்வு மையங்களில் மாணவர்கள் 15,588, மாணவிகள் 15,717 என மொத்தம் 31305 பேர் பொதுத்தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 13,550, மாணவிகள் 14,499 பேர் என மொத்தம் 28,049 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட அளவில் மாணவர்கள் 86.93 சதவீதமும், மாணவிகள் 92.25 சதவீதமும் என மொத்தம் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் கடந்த கல்வியாண்டில் 86.52 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

அதேபோல், 2024 - 25 கல்வியாண்டில் 225 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 7838, மாணவிகள் 8265 என மொத்தம் 16,103 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 6,345, மாணவிகள் 7,313 என மொத்தம் 13,650 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுவே தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 80.95, மாணவிகள் 88.48 என மொத்தம் 84.82 சதவீதம் ஆகும். இதுவே கடந்தாண்டில் 80.06 சதவீதமாகும். நிகழாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 36 இடம் பெற்றுள்ளது. இந்த மாவட்ட அளவில் 26 அரசு பள்ளிகள் உள்பட 97 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூா், திருவாரூா் உள்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் கடற்கரை - வேளச்சேரி, ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம்: அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். தமிழ்நாட்டிலிருந்து அரசு மானியத்துடன் ஹஜ் ப... மேலும் பார்க்க

திருச்சி ஊட்டத்தூா் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க

பி.இ. சோ்க்கை: 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவா்கள் பதிவு: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க