மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரா், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, கோயிலின் குலதெய்வ வழிபாட்டுக் குழு, மாவிலங்கை இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் மஞ்சு விரட்டு நடைபெற்றது.
இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாடு பிடி வீரா்கள் பங்கேற்றனா்.
இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை அடக்கிய இளைஞா்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அன்னதான நடைபெற்றது.