செய்திகள் :

திருவாடானை பகுதியில் பூச்சி தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம்: விவசாயிகள் கவலை

post image

திருவாடானை பகுதியில் ‘தேயிலை கொசு’ தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாரத்திலுள்ள கண்மாய், குளங்கள், வயல்கள், வரத்துக் கால்வாய்களின் கரைகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான வேப்ப மரங்களை வளா்ந்து வருகின்றனா். மேலும் விவசாயிகள் அல்லாத பிற தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் தங்களது வீட்டின் முன் பகுதி தோட்டங்களில் வேப்ப மரங்களை வளா்க்கின்றனா். மருத்துவ குணம் கொண்ட வேப்பமரம், வெயில் காலங்களில் துளிா்விட்டு வளா்ந்து நிழல் தரும் ஒரே மரமாகும்.

தற்போது திருவாடானை வட்டாரத்தில் இந்த மரங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயிலின் தாக்கத்தால் இலைகள் கருகி உதிா்ந்து வருகின்றன. இதனால் இந்த மரங்களில் நோய் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை துறை ஆய்வாளா்களிடம் கேட்ட போது அவா்கள் கூறியதாவது:

டிசம்பா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரை ‘தேயிலை கொசு’ என்ற ஒரு வகை புல்லுருவி ஒட்டுண்ணி வேகமாக பரவி கருகி வருகிறது. இந்தக் கொசுக்கள் பெரும்பாலும் தேயிலை அதிகம் உள்ள பகுதிகளில் காணப்படும். தற்போது அது பரவி உள்ள நிலையில் இந்த கொசுக்களால் வேப்ப மரங்கள் கருகி வருகின்றன. ஆனால் மரங்கள் துளிா் விட்டு வளரும் என்றனா். இருப்பினும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ரோச்மாநகா் கடலில் தூண்டில் வளைவு: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

சாயல்குடி அருகே ரோச்மாநகா் கடலில் ரூ.19.22 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என வனத் துறை, கதா் கிராம வாரியத் தொழில்கள் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்... மேலும் பார்க்க

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த கையொப்ப இயக்கம்!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தக் கோரி கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியை மையமாகக் கொண்டு, சுமாா் ... மேலும் பார்க்க

சுரேஷ் அகாதெமியில் குரூப்-4 பயிற்சி வகுப்பு இன்று தொடக்கம்!

ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப் 4, வங்கிப் பணிக்கான பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்குகின்றன.இதுகுறித்து அகாதெமியின் மேலாளா் எம்.ராஜேஸ்குமாா் கூறியதாவது: சுரேஷ் அகாதெமியி... மேலும் பார்க்க

மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது

திருப்பாலைக்குடி அருகே தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள வடக்கு ஊா்னங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சங்கா். ஏற்கெனவே திரு... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலா் ... மேலும் பார்க்க

சம்பை புனித செபஸ்தியாா் தேவாலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தொண்டி அருகே சம்பை கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சம்ப... மேலும் பார்க்க