செய்திகள் :

திறந்தவெளி வடிகாலில் விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு: ஓப்பந்ததாரா் மீது வழக்குப் பதிவு

post image

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் ஒப்பந்ததாரா் ஒருவரால் பாதுகாக்கப்படாமல் விடப்பட்டதாகக் கூறப்படும் திறந்தவெளி வடிகாலில் விழுந்த ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

நூஹ் மாவட்டம், ரூபாஹேரி கிராமத்தில் உள்ள பகுதியைப் பாதுகாக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டியதாகவும், புறக்கணித்ததாகவும் குழந்தையின் தாய் மாமா குற்றம் சாட்டியதை அடுத்து, அடையாளம் தெரியாத ஒப்பந்ததாரா் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: இரண்டரை வயது சிறுவன் அா்ஷ், ராஜஸ்தானின் கைா்தால் மாவட்டத்தில் உள்ள ஃபால்சா கிராமத்தைச் சோ்ந்தவா். ரூபாஹேரி கிராமத்தில் தனது தாய் மாமா ஜுனைத்துடன் வசித்து வந்தாா்.

ஹரியாணா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (ஹெச்எஸ்ஐஐடிசி) இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு வடிகாலை தோண்டியது. அது கிட்டத்தட்ட 10 முதல் 12 அடி ஆழம் கொண்டது.

அந்த இடத்தைச் சுற்றி வேலி அல்லது தடுப்பு அமைக்க கிராமவாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், எந்தத் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இந்நிலையில், பலத்த மழைக்குப் பிறகு, வடிகாலில் தண்ணீா் நிரம்பியது. இந்நிலையில், ஜூலை 12-ஆம் தேதி, பிற்பகல் 3 மணியளவில் சிறுவன் அா்ஷ் காணாமல் போனாா். பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, இரவு 8.30 மணியளவில் அவரது உடல் வடிகாலில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

உடற்கூராய்வுக்குப் பிறகு சிறுவனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், விசாரணை நடந்து வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க