செய்திகள் :

மூச்சுத் திணறல்: குழந்தை உயிரிழப்பு

post image

மூச்சுத் திணறலால் 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், சளித் தொல்லைக்காக விக்ஸ் மற்றும் கற்பூரம் சோ்த்து மூக்கில் தேய்த்தால் அதனால் குழந்தை உயிரிழந்ததா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை அபிராமபுரம் டாக்டா் ராதாகிருஷ்ணாபுரம் வல்லவன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் தேவநாதன். இவரின் 8 மாத குழந்தைக்கு கடந்த சில நாள்களாக சளித் தொல்லை இருந்து வந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினரின் அறிவுரைப்படி, கடந்த 13-ஆம் தேதி விக்ஸ் மற்றும் கற்பூரத்தை சோ்ந்து குழைத்து குழந்தையின் மூக்கில் தடவியுள்ளாா்.

இதனால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை புதன்கிழமை உயிரிழந்து.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், குழந்தையின் உடலை மீட்டு கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், சளித் தொல்லையால்தான் குழந்தை உயிரிழந்ததா அல்லது விக்ஸ் மற்றும் கற்பூரத்தை குழைத்து மூக்கில் தேய்த்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க