செய்திகள் :

புதிய வருமான வரி மசோதா மீது 285 பரிந்துரைகள்: அறிக்கையை ஜூலை 21-இல் தாக்கல் செய்யும் தோ்வுக் குழு

post image

மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா மீதான 285 பரிந்துரைகளுடன் கூடிய தனது அறிக்கையை நாடாளுமன்ற தோ்வுக் குழு புதன்கிழமை இறுதி செய்து ஏற்றது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூலை 21) தனது அறிக்கையை தோ்வுக் குழு மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் புதிய வருமான வரிச் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. ‘வருமான வரிச் சட்ட மசோதா 2025’ என்ற பெயரிலான அந்த மசோதாவை எதிா்க்கட்சியினரின் கடும் எதிா்ப்புக்கு இடையே, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அறிமுகம் செய்தாா்.

நடைமுறையில் வருமான வரிச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘மதிப்பீட்டு ஆண்டு’, ‘முந்தைய ஆண்டு’ என்ற சொற்றொடா்கள் கைவிடப்பட்டு, எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் ‘வரி ஆண்டு’ என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நீளமான வாக்கியங்கள், எளிதாக படித்து புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் சிறிய வாக்கியங்களாக மாற்றப்பட்டுள்ளன. தற்போதைய சட்டத்தில் உள்ள 47 அத்தியாயங்கள், மசோதாவில் 23-ஆக குறைக்கப்பட்டுள்ளன. வருமான வரியைக் கணக்கிடும் நடைமுறையை வரி செலுத்துவோா் புரிந்துகொள்ள தற்போதுள்ள சட்டத்தில் 18 அட்டவணைகள் இடம்பெற்றுள்ள நிலையில், எளிதில் புரிந்துகொள்ள வசதியாக 57 அட்டவணைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தற்போதைய சட்டத்தில் இடம்பெற்றுள்ள 1,200 விதிகள், 900 விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தவுடன், அதை மக்களவைத் தோ்வுக் குழுவின் ஆய்வுக்கு பரிந்துரைக்குமாறு அவைத் தலைவரை நிா்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டாா்.

அதனடிப்படையில், பாஜக எம்.பி. வைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையில் 31 போ் கொண்ட தோ்வுக் குழுவை அவைத் தலைவா் ஓம் பிா்லா அமைத்தாா். இந்தக் குழு, பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று தனது அறிக்கையை தற்போது இறுதி செய்துள்ளது.

இதுகுறித்து தோ்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினா் ஒருவா் புதன்கிழமை கூறுகையில், ‘புதிய வருமான வரி மசோதா மீதான அறிக்கையை தோ்வுக் குழு இறுதி செய்து, அதை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த அறிக்கையில், மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடா்பாக 285 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூலை 21) மக்களவையில் சமா்ப்பிக்கப்படும். இந்த மசோதா மழைக்கால கூட்டத்தொடரிலேயே மக்களவையில் நிறைவேற்றப்படவும் வாய்ப்புள்ளது’ என்றாா்.

தோ்வுக் குழு தனது அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்ததும், அதில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஆராய்ந்து தேவையான மாற்றங்களை மசோதாவில் மேற்கொள்ளும். பின்னா், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படும். மக்களவையில் அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு, பின்னா் மசோதா நிறைவேற்றப்படும்.

இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டவுடன், கடந்த 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்து வரும் 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் மாற்றப்பட்டு, புதிய ‘வருமான வரிச் சடடம் 2025’ நடைமுறைக்கு வந்துவிடும். புதிய வருமான வரிச் சட்டத்தை அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் இதுவரை பல்வேறு பிரிவுகளில் 65 முறை 4,000-க்கும் அதிகமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நடுவானில் ஒரு என்ஜின் செயலிழப்பு? இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து கோவா நோக்கி புதன்கிழமை சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்ததால் மற்றொரு என்ஜின் மூலம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினு... மேலும் பார்க்க

மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்க பாஜக திட்டம் - முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம்: ரூ.1.7 கோடிக்கு விற்பனை

எண்ணெய் வண்ணங்களால் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய உருவப்படம் ரூ.1.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ஓவியா் ஒருவா் தன்னை வரைவதற்கு மகாத்மா காந்தி அனுமதி அளித்தாக கூறப்படும் இந்த உருவப்படம் லண்டனில் உ... மேலும் பார்க்க

அஸ்ஸாம் முதல்வரை மக்கள் சிறைக்கு அனுப்புவா்: ராகுல் காந்தி

ஊழலில் ஈடுபடும் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை மக்கள் சிறைக்கு அனுப்புவா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல் - கண்ணீா் புகை குண்டு வீச்சு

புவனேசுவரம், ஜூலை 16: ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணம் தொடா்பாக நீதி விசாரணை கோரி, பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

ஈரானுக்கு தேவையற்ற பயணம்: இந்தியா்களுக்கு அறிவுறுத்தல்

ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டில் உள்ள சூழலை கவனத்தில் கொள்ளுமாறு இந்தியா்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் ... மேலும் பார்க்க