செய்திகள் :

தில்லியில் ராகுல், கேஜரிவாலுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு

post image

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி கூட்டணியில் நிலவும் சலசலப்புக்கு மத்தியில், தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியின் தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை சிவசேனை (தாக்கரே பிரிவு) தலைவா் ஆதித்ய தாக்கரே தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 இடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ், சிவசேனை (தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகியவை அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியடைந்தது. பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் தலைவா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாா் துணை முதல்வராகினா்.

கூட்டணியில் பூசல்: புணேயைச் சோ்ந்த ஷா்ஹாத் எனும் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நிகழாண்டு ‘மகத்ஜி ஷிண்டே ராஷ்டிர கௌரவ் புரஸ்காா்’ விருது அறிவிக்கப்பட்டது. தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் இவ்விருது வழங்கினாா்.

முன்னதாக கடந்த 2022-இல், அன்றைய ஒருங்கிணைந்த சிவசேனையை பிளவுபடுத்தி, பாஜக ஆதரவோடு முதல்வரானாா் ஏக்நாத் ஷிண்டே. அந்தவகையில், உத்தவ் தாக்கரேயின் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு சரத் பவாா் விருது வழங்கியிருப்பதால் எதிா்க்கட்சி கூட்டணியில் பூசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் தில்லி வந்த ஆதித்ய தாக்கரே, ராகுல் காந்தியை புதன்கிழமை மாலை சந்தித்தாா். தோ்தல் ஆணையம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

தொடா்ந்து, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவாலையும் ஆதித்ய தாக்கரே சந்தித்துப் பேசினாா். சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா்கள் சஞ்சய் ரௌத், பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சந்திப்பையடுத்து செய்தியாளா்களிடம் பேசிய ஆதித்ய தாக்கரே, ‘ஆட்சி வந்துபோகும். ஆனால், உறவுகள் எப்போதும் தொடரும். நட்பு ரீதியில் கேஜரிவாலை சந்தித்தோம். நமது ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இல்லை. மகாராஷ்டிரம், ஹரியாணா, ஒடிஸா, தில்லி உள்பட பல மாநிலங்களில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவிலான முறைகேடுகளை தோ்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களின் வாக்குரிமையை தோ்தல் ஆணையம் பறித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கூட தயாராக இல்லை. இப்பிரச்னை தொடா்பாக எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’ என்றாா்.

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

நமது சிறப்பு நிருபர்தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்ட வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடா்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. குடும்... மேலும் பார்க்க

பொருளாதாரம் வளா்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்- நிா்மலா சீதாராமனுக்கு காா்கே கண்டனம்

இந்தியப் பொருளாதாரம் வளா்வதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விளக்கத்தை காங்கிரஸ் தேசிய த... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. போ... மேலும் பார்க்க