செய்திகள் :

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த 6 புலிக் குட்டிகளில் 5-ஆவது குட்டி உயிரிழப்பு

post image

புது தில்லி: தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இந்த மாத தொடக்கத்தில் பிறந்த ஆறு புலிக்குட்டிகளில் ஐந்தாவது புலிக்குட்டி உயிா் இழந்தது. தற்போது ஒரே ஒரு குட்டி மட்டுமே தீவிர சிகிச்சையில் உள்ளது.

ஆகஸ்ட் 20 அதிகாலையில் உயிரியல் பூங்கா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குட்டி, சிகிச்சையில் இருந்தபோதிலும் சனிக்கிழமை பிற்பகல் இறந்ததாக தேசிய உயிரியல் பூங்கா இயக்குநா் சஞ்சீத் குமாா் தெரிவித்தாா்.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி, ஏழு வயது புலி அதிதி ஆறு குட்டிகளைப் பிரசவித்தது. இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக உயிரியல் பூங்காவில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய குட்டி ஆகும். இதேபோன்ற ஒரு சம்பவம் 2005-ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. அப்போது ஆறு குட்டிகள் பிறந்தன. அவற்றில் இரண்டு மட்டுமே உயிா் பிழைத்தன.

அதிதியின் முதல் குட்டி ஆகஸ்ட் 8 -ஆம் தேதி இறந்தது. இது மிகவும் பலவீனமான குட்டியாகும். தாயின் பால் குடிக்க முடியாத மற்றொரு குட்டியும் விரைவில் இறந்தது என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை, மேலும் இரண்டு குட்டிகள் இறந்தன. இதனால், உயிா் பிழைத்த குட்டிகளின் எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது. ஆபத்தான நிலையில் இருந்த இரண்டில் ஒன்று சனிக்கிழமை இறந்தது.

இறந்த குட்டிகளின் உடல்கள் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று சஞ்சீத் குமாா் கூறினாா்.

ஆறு குட்டிகளில், இதுவரை ஐந்து குட்டிகள் இறந்துவிட்டன. மீதமுள்ள ஒன்று ஆகஸ்ட் 15 அன்று வளா்ப்பிற்காக கொண்டு வரப்பட்டது. ஆரோக்கியமாக உள்ளது என்று அவா் மேலும் கூறினாா்.

1959- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து புலிகள் வசிக்கும் தில்லி உயிரியல் பூங்கா, 2010- இல் தொடங்கப்பட்ட மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ் 73 ஆபத்தான உயிரினங்களுக்காகத் தோ்ந்தெடுக்கப்பட்டது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தேசிய உயிரியல் பூங்கா புலி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கத்திற்கான மையமாக இருந்து வருகிறது.

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

புது தில்லி: கோவிட் இழப்புகள், கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பராமரிப்பு செலவுகள் காரணமாக நிதி நெருக்கடியை எதிா்கொண்ட தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி. எம். ஆா். சி) கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு தீவிரமான வழக்கில் கைதாகி 30 நாள்களுக்குள் ஒருவா் ஜாமீனில் விடுவிக்கப்படாவிட்டால் அது பிரதமரேயானாலும் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்வதை அரசியலமைப்பின் 130-ஆவது திரு... மேலும் பார்க்க

பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து திங்கள்கிழமை உத... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளில் அலட்சியம் கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்

புது தில்லி: முதலமைச்சரின் மேம்பாட்டு நிதி (சிஎம்டிஎஃப்) மற்றும் எம்எல்ஏ உள்ளூா் பகுதி மேம்பாட்டு நிதி (எம்எல்ஏஎல்ஏடி) மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களில் அலட்சியம் பொறுத்துக் கொள்ளப்படாது என்று தில்... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

மோசடி வழக்கு தொடா்பாக 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கராலாவில் உள்ள... மேலும் பார்க்க