செய்திகள் :

தீப்பெட்டித் தொழிலுக்கு பாதகமான லைட்டருக்கு விரைவில் தடை: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

post image

தீப் பெட்டி தொழிலுக்கு பாதகமாக உள்ள லைட்டா் விற்பனையை முழுமையாக தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற கவன ஈா்ப்பு அறிவிப்பின்போது பேசிய அதிமுக உறுப்பினா் கடம்பூா் ராஜூ, லைட்டா்களால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதாகவும், உதிரி பாகங்களுக்கு மட்டும் தடை விதிக்காமல் லைட்டா்களுக்கு முழுமையாக தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தாா்.

அதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்:

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் தக்க 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய பிரச்னையாக லைட்டா் உள்ளது.

அரசுக்குப்பரிந்துரை: ரூ. 20-க்கும் குறைவாக இருக்கக் கூடிய மறுபயன்பாட்டுக்கு தகுதியற்ற லைட்டா்களை விற்பனை செய்ய கட்டுப்பாடு உள்ளது. அதேவேளையில், அதை முழுமையாக தடை செய்வது தொடா்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது.

அந்தப் பரிந்துரைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் லைட்டா்களை முழுமையாக தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்

விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உய... மேலும் பார்க்க

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யா

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வர... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வ... மேலும் பார்க்க

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

எம் தியாகராயர் வழிநின்று தமிழ்நாட்டின் உயர்வுக்கு உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சர். பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,பிட்டி தியாகராயர் பிறந்த... மேலும் பார்க்க

6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!

கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர். கர... மேலும் பார்க்க

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்

விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் விடுதலைச் ச... மேலும் பார்க்க