செய்திகள் :

தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் : மும்பை சித்தி விநாயக் கோயிலில் தேங்காய், பிரசாதத்திற்கு தடை!

post image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வான்வெளித் தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து மும்பை போன்ற முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் உள்ள சித்தி விநாயக் கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கோயிலுக்கு பக்தர்கள் தேங்காய் மற்றும் பிரசாதம் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய் மூலம் வெடிகுண்டு எடுத்து வரப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சித்தி விநாயக் கோயில் டிரஸ்ட் தலைவர் சதா சர்வான்கர் கூறுகையில்,'' போலீஸார் மற்றும் மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க கோயிலுக்குள் பக்தர்கள் தேங்காய் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நாட்களுக்கு இத்தடை?

பிரசாதத்திலும் விஷம் கலக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே கோயில் வளாகத்தில் இருக்கும் கடைக்காரர்களிடம் இரண்டு நாட்களில் இருக்கும் கையிருப்பு பொருட்களை காலி செய்யும்படியும், புதிதாக வாங்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் தொடர்பாக எந்த வித அச்சுறுத்தலும் வரவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு நாட்களுக்கு இத்தடை இருக்கும் என்று சொல்ல முடியாது. பக்தர்கள் அருகம்புல், பூக்களை விநாயகருக்கு படைக்கலாம். பெரிய மாலைகள் கூட கோயிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது''என்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசு பாகிஸ்தான் மீது நடத்திய சிந்தூர் தாக்குதல் வெற்றிகரமாக அமைந்ததற்கு இதே கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2006 மற்றும் 2007ம் ஆண்டு இது போன்று பிரசாதம் மற்றும் தேங்காயிக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: "ஒரு பெண் முடியாது எனச் சொன்னால் முடியாதுதான்" -மும்பை நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம்... மேலும் பார்க்க

ஒட்டிப் பிறந்த சகோதரிகளைக் கைவிட்ட பெற்றோர்; 13 ஆண்டுகளாக வளர்க்கும் மருத்துவமனை; நெகிழ்ச்சி பின்னணி

மும்பையில் உள்ள வாடியா மருத்துவமனை குழந்தைகளுக்கானது. இம்மருத்துவமனையில் பன்வெல் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு உடம்பின் கீழ்ப் பகுதி ஒட்டிய நிலையில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.அக்குழந்தைகளைத் தனித்தனியா... மேலும் பார்க்க

இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான் பிரதமர்?

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கு எதிர்வினையாற்று விதமாக மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிக... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் முக்கிய இடங்களைக் குறிவைக்கும் இந்தியா; ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மே7 ஆம் ... மேலும் பார்க்க

"ஒவ்வொரு முறையும் அவளை அழைக்கும் போது..." - குழந்தைக்கு 'சிந்தூரி' எனப் பெயரிட்ட பீகார் தம்பதி

பீகாரைச் சேர்ந்த தம்பதி தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலிருந்து எடுத்து 'சிந்தூரி’ என்று பெயரிட்டுள்ளார்.இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிகாலை ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ ந... மேலும் பார்க்க

விமானத்தில் 3 வயது குழந்தைக்கு பரிமாறப்பட்ட ஒயின்; மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம் - என்ன நடந்தது?

விமானத்தில் பயணித்த மூன்று வயது சிறுவனுக்கு விமான பணிப்பெண் ஒருவர் தவறுதலாக ஒயின் வழங்கியதை அடுத்து அந்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.ஷாங்காயில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தின் வணிக வகுப்... மேலும் பார்க்க