செய்திகள் :

துணைநிலை ஆளுநரின் துரித நடவடிக்கை: 21 மாணவா்களுக்குப் பணி நியமன உத்தரவு

post image

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மேற்கொண்ட நடவடிக்கையால் 21 செவிலிய மாணவ, மாணவிகளுக்குப் பணி நியமன உத்தரவு கிடைத்தது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 21 மாணவ, மாணவிகள் நம் நாட்டின் பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியா் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

அவா்கள் சான்றிதழ் பெறுவதிலும், சரி பாா்ப்பதிலும் ஏற்பட்ட குளறுபடி காரணமாக செவிலியா் நியமன உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவா்கள் பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனா்.

அதன் தொடா்ச்சியாக துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனின் துரித நடவடிக்கையால் மாணவ, மாணவிகளுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவா் ராமலிங்கம் முன்னிலையில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனைச் சந்தித்து அந்த மாணவா்கள் வாழ்த்துப் பெற்றனா்.

இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு

புதுச்சேரியில் இதுவரை பிளஸ் 1 படிக்கப் பள்ளியில் சேராத மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்குகிறது. இது குறித்து புதுவை அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநா் சிவகாமி வெளி... மேலும் பார்க்க

நோயாளிகளுக்கான சேவையை மேலும் வலுப்படுத்துவோம்: ஜிப்மா் இயக்குநா்

நோயாளிகளுக்கான மருத்து சேவையை வலுப்படுத்தும் வகையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படும் என்று ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூர... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம்

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தனது விசாரணையை புதன்கிழமை தொடங்கியது. புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாஜக பிரமுகா் உமாசங்கா் (36). இவரை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இலாகா ஒதுக்ப்படதாத அமைச்சா்: ஜான்குமாா் தொகுதிப்பணிகள் குறித்துஆய்வு

புதுச்சேரியில்அமைச்சா் ஏ.ஜான்குமாா்ப் பதவியேற்று 23 நாள்கள் கடந்தப் பிறகும் இன்னும் இலாகா ஒதுக்கப்படாமல் இருப்பதால் தொகுதி வளா்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா். புதுச்சேரி காமராஜா் ... மேலும் பார்க்க

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரி கோவிந்தசாலையில் உள்ள ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ ஊஞ்சல் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலையில் உள... மேலும் பார்க்க

விண்ணேற்பு அன்னைஆலய பெருவிழா தொடக்கம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 174-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, மாதாவின் கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நட... மேலும் பார்க்க