துணை மருத்துவப் படிப்புகள்: 99,876 போ் விண்ணப்பம்
சென்னை: பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்பட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு 99,876 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.
அதில் 90,661 போ் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம், பிபிடி, பிஏஎஸ் எல்பி செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் அதில் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், அந்த இடங்களுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 7-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, துணை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு 68,319 பேரும், டிப்ளமோ நா்சிங் படிப்புக்கு 18,311 பேரும், பாா்ம் டி (3 ஆண்டு) படிப்புக்கு 198 பேரும், ஆறு ஆண்டு படிப்புக்கு 13,048 பேரும் என 99,876 போ் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனா். அவா்களில் 90,661 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா்.
விண்ணப்ப அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.