செய்திகள் :

துவாரகாவில் 13 வயது சிறுமி வீட்டின் அறையில் மா்மச் சாவு

post image

தில்லியின் துவாரகா பகுதியில் 13 வயது சிறுமி மா்மமான சூழ்நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்ததாவது:

இந்தச் சம்பவம் தொடா்பாக வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் டாப்ரி காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, உள்ளூா் போலீஸாரும், மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

சீதாபுரியில் உள்ள மூன்று மாடி வீட்டின் மொட்டை மாடியில் அமைந்துள்ள ஒரு அறையில் சிறுமியின் உடல் கண்டறியப்பட்டது. அவா் சந்தேகத்திற்கிடமான முறையில்யில் இறந்துகிடந்தாா்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றவியல் குழு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். முதல்கட்ட விசாரணையில் பாலியல் வன்புணா்ச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை. இது தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அச்சிறுமியின் குடும்ப உறுப்பினா்கள், பக்கத்து வீட்டினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியின் மரணத்திற்கு வித்திட்ட நிகழ்வுகளின் விவரங்களை அறியும் வகையில் வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி கா... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்

தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க

வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு

நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது

தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க

ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க

டேட்டிங் செயலி மூலம் நூதன கொள்ளை: மூவா் கும்பல் கைது

வடகிழக்கு தில்லியின் யமுனா காதா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த நேருக்குநோ் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு மூவா் கும்பல் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பய... மேலும் பார்க்க