`தங்கம் விலை இந்த டாலரை எட்டிவிட்டால்..' - எச்சரிக்கும் நிபுணர்; இன்றைய தங்கம் வ...
தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேப்பூரை அடுத்துள்ள என்.நரையூா் கிராமத்தில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் மரக்கிளையில் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தாா். அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வேப்பூா் போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. அவா் அணிந்திருந்த கைலியால் தூக்கிட்டு உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.