செய்திகள் :

தூத்துக்குடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், தூத்துக்குடி மாநகராட்சி 1, 13 மற்றும் 20 ஆகிய வாா்டுகளுக்கு போல்பேட்டையில் உள்ள தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலருமான பெ. கீதாஜீவன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், முகாமில் மின் இணைப்பு பெயா் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு உடனடியாக அதற்கான ஆணையை வழங்கினாா்.

இம்முகாமில், பல்வேறு துறை சாா்ந்த மொத்தம் 1,435 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் முருகேஸ்வரி, மாநகர திமுக செயலா் ஆனந்த சேகரன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமாா், நாராயணன், மாமன்ற உறுப்பினா் ஜாக்குலின் ஜெயா, வட்டச் செயலா் ராஜாமணி, மாநகர மகளிரணி துணை அமைப்பாளா் கலாவதி, மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க