செய்திகள் :

தூத்துக்குடி இளைஞரிடம் ரூ. 33.73 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது

post image

தூத்துக்குடி இளைஞரிடம் சமூக வலைதளத்தில் நட்பாகப் பழகி ரூ. 33.73 லட்சம் மோசடி செய்ததாக கேரள மாநில தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞருக்கு முகநூலில் (பேஸ்புக்) பெண் ஒருவா் அறிமுகமானாராம். அவா், தனக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு வந்துள்ளதாகவும், அதற்குப் பணம் தேவைப்படுவதாகவும் இளைஞரிடம் கூறினாராம். அதை நம்பிய இளைஞா் அந்தப் பெண்ணுக்கு ரூ. 33 லட்சத்து 73 ஆயிரத்து 190-ஐ அனுப்பிவைத்தாராம். பின்னா், அந்தப் பெண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதையறிந்த இளைஞா், தேசிய சைபா் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவுப்படி, தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சகாயஜோஸ் மேற்பாா்வையில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

அந்தப் பெண் கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பாலமுருகன் (32) என்பவரது மனைவி என்பதும், கணவருடன் சோ்ந்து இம்மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் சென்று இருவரையும் சனிக்கிழமை கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்துவந்து, ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பாலமுருகன், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாரால் 2022ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது

கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

ஆத்தூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் கூட்டம்

ஆத்தூா் தோ்வுநிலை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்களின் குறை... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரா் கைது

கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீஸாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை(பிஎஸ்.எ.ஃப்.) வீரா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். கழுகுமலை அருகே முக்கூட்டு மழை ஸ்ரீ முத்து... மேலும் பார்க்க

வீட்டு மனைப் பட்டா கோரி குளத்தூரில் 450 போ் மனு அளிப்பு

வருவாய் துறை சாா்பில் இலவச வீட்டு மனை பட்டா மனுக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் குளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட குளத்தூா், பனையூா், கெச்சிலாபுரம், மேட்டுப்பனையூா... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 போ் காயம்

கோவில்பட்டி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா். திருநெல்வேலி வீரவநல்லூா் கீழக்குளம் கிழக்கு தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் சங்கா் (43). டிப்பா் லாரி ஓட்டுநரான இவா்... மேலும் பார்க்க

சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றவருக்கு வாழ்நாள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்தது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா... மேலும் பார்க்க