செய்திகள் :

தூத்துக்குடி: ஒருமணி நேரத்தில் நடந்த இரட்டைக்கொலை; முன் விரோதம் காரணமா? பழிக்குப்பழியா?

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று  கொண்டிருந்த வள்ளுவர்நகரைச் சேர்ந்த   பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி செய்து விட்டு தப்பி ஓடினர். இதில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் புதுக்கிராமம் செண்பகாநகரில் வீட்டிற்குள் புகுந்து கஸ்தூரி என்பவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியது. 

பிரகதீஸ் - கஸ்தூரி

இதைத்தடுக்க வந்த செண்பகராஜ் என்பவருக்கு  கையில் வெட்டு விழுந்தது. கொலை செய்யப்பட்ட இருவரது சடலங்களை  கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைப்பற்றி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு கொலை சம்பவம் குறித்த   தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் வள்ளுவர்நகர் டாஸ்மாக் கடை வாசலில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரனுக்கும்,  செண்பகா நகரில் கொலை செய்யப்பட்ட கஸ்தூரியின் மகன் சதீஷ் மாதவனுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் சி.எஸ்.ஆர் ரசீது மட்டும் போட்டு முடித்துள்ளனர் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.

சிகிச்சை பெற்று வரும் செண்பகராஜ்

இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இரண்டு கொலை சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஐந்து தனிப் படைகள் அமைத்து  குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பதிலுக்கு பதில் கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த நடந்த இரண்டு கொலைச் சம்பவங்கள் கோவில்பட்டியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர்' குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நி... மேலும் பார்க்க

ஹரியானா: 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; காதலனுடன் பாஜக பெண் நிர்வாகி கைது; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பா.ஜ.க நிர்வாகியான நிஷா தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நிஷாவுடன் வசித்து வர... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சியில் முதியவர் சுட்டுக் கொலை; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - நடந்தது என்ன?

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50). கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்கும... மேலும் பார்க்க

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் நண்பரை அடித்துக் கொலைசெய்த பலகாரக் கடை தொழிலாளி - நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது: 41). இவர், கரூரில் உள்ள ஒரு பலகாரக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (வயது: 35). அதேபோல், மது... மேலும் பார்க்க

`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி'- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் கடந்த ... மேலும் பார்க்க