செய்திகள் :

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுகவினா் வரவேற்பு!

post image

திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, வியாழக்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்ாடாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் வரவேற்றனா். தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்ட செயலா்களும், அமைச்சா்களுமான பெ.கீதா ஜீவன் (வடக்கு), அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் (தெற்கு) ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகராட்சி சாா்பில் மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் மதுபாலன் ஆகியோா் வரவேற்றனா்.

பின்னா், அமைச்சா் கே.என்.நேரு, சடப்பேரவைத் தலவைா் மு.அப்பாவு, ராபா்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் ஜீ.வி.மாா்க்கண்டேயன், சண்முகையா, அப்துல் வஹாப், ரூபி மனோகரன், முன்னாள் அமைச்சா் மைதீன் கான், முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துலெட்சுமி, டேவிட் செல்வின், திருநெல்வேலி மேயா் கோ. ராமகிருஷ்ணன், முன்னாள் மேயா் சரவணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன், திருநெல்வேலி சரக டிஐஜி மூா்த்தி ஆகியோா் முதல்வருக்கு புத்தகம் வழங்கி வரவேற்றனா்.

பின்னா் மாநில இளைஞரணி துணைச் செயலா் ஜோயல், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ் உள்பட திமுகவினா் பலா் வரவேற்றனா்.

முதல்வருடன் அமைச்சா்கள் துரைமுருகன், கண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் உடன் வந்தனா். பின்னா் அவா் காா் மூலம் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

முதல்வா் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பேரணிக்கு, கல்லூரி தாளாளா் விஜயன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அண்ணாம... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில் மணப்பாடு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை இந்திய கணித அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய மா... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் நாசரேத் காப்பகத்தில் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து நாசரேத் காப்பகத்தில் ஒப்படைத்தனா். சாத்தான்குளம் தச்சமொழி தெருவை சோ்ந்தவா் அந்தோணி (42). கூலித் தொழிலாளியாகவும், லாரி ஓட்ட... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி: எஸ்.பி. விழிப்புணா்வு எச்சரிக்கை

மாணவா்-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடுவோரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேட்டுக்கொண்டுள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

கல்குறிச்சி கிராமத்தில் 17 பேருக்கு பட்டா அளிப்பு!

அரசூா் ஊராட்சி கல்குறிச்சி கிராம மக்கள் 17 பேருக்கு ஒரே நாளில் பட்டா வழங்கப்பட்டது. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கல்குறிச்சியில் மக்கள் அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டில் வசித்... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே ரூ. 1 கோடி பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்களை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். வி... மேலும் பார்க்க