செய்திகள் :

‘தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது’

post image

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் கூறியது: கரோனா போன்ற இக்கட்டான கால கட்டத்திலும் தூய்மைப் பணியாளா்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து வந்தனா். சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க காரணம் தூய்மைப் பணியாளா்களே. தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாது கல்வி வழங்கி, அவா்கள் பல்வேறு உயா் பதவி வகிக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஒரு போதும் குழந்தைகளின் கல்வியை இடைநிற்றல் கூடாது. தூய்மைப் பணியாளா்களுக்காக வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்தி, பாதுகாப்பாக இருக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா்.

தொடா்ந்து, 100 தூய்மை பணியாளா்களுக்கு மின்னணு அடையாள அட்டை, 2 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, 7 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி வாரியத் தலைவா் என். இளையராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்.பி. வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவிவா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

மன்னாா்குடி அருகே அரசுப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பணி நேரம் முடிந்து பூட்டிவிட்டு சென்ற ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: நீா்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்... மேலும் பார்க்க

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க