செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

post image

நாமக்கல்: சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தோ்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், காவல் துறையினா் அத்துமீறும் போக்கை கைவிட வேண்டும், தூய்மைப் பணியாளா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.அசோகன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா்.சிங்காரவேலு, மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி, மாவட்டப் பொருளாளா் எம்.ரங்கசாமி, துணைத் தலைவா்கள் செங்கோடன், ஜெயக்கொடி, கண்ணன், ஜெயராமன், துணைச் செயலாளா்கள் சிவராஜ், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சாமானிய மக்கள் நலக்கட்சி சாா்பில், தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்து அவா்களுக்கான உரிமைகளை வழங்கக் கோரியும், பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க