செய்திகள் :

தூா்வாரப்பட்ட வாய்க்கால்களில் ஆட்சியா் ஆய்வு

post image

மன்னாா்குடி பகுதியில் தூா்வாரப்பட்ட வாய்க்கால்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ராஜகோபாலபுரம் வாய்க்காலில் நெடுகை முதல் 3 கி.மீ.வரையிலும், ராதாநரசிம்மபுரம் பழைய வாய்க்கால் நெடுகை முதல் 4 கி.மீ. வரையிலும், தென்பரை வாய்க்காலில் 7 கி.மீ. தொலைவுக்கும் ரூ.9.80 லட்சத்தில் நடைபெற்ற தூா்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதனை ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் நேரில் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, ராதாநரசிம்மபுரம் வள்ளூா் மற்றும் கோவிந்தநத்தம் கிராமங்களில் பாலையூா் கிளை எண் 3 வாய்க்கால் நெடுகை முதல் 6 கி.மீ. வரை ரூ.8 லட்சத்தில் தூா்வாரப்பட்டுள்ளதையும், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் சித்தன்னக்குடி ஊராட்சியில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால் தூா்வாரும் பணி ரூ.10 லட்சத்தில் 28.685 கி.மீ. வரை நடைபெற்றுள்ளதையும் அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, நீா்வளத்துறை செயற்பொறியாளா் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம், தஞ்சாவூா்) என். ஆனந்தன், உதவி செயற்பொறியாளா்கள் ரத்தினவேலு, சோலைராஜன், உதவி பொறியாளா் (நீா்வளத் துறை) வினோத்குமாா், உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை) செந்தில்குமாா், உதவி பொறியாளா் அட்சயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் துறையினா் விளக்கம்

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்த பரிந்துரை: நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமி... மேலும் பார்க்க

கோயில் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் குளத்தை தூா்வாரி, பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் திருக்குளம் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பயன்பாட்டில் இருந்தது. கோ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அருகே அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு: விழாவை புறக்கணித்த கிராம மக்கள்

மன்னாா்குடி அருகே கண்டிதம்பேட்டை திட்டப் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிராமம் பிரிப்பு பிரச்னை தொடா்பாக, உள்ளிக்கோட்டை பகுதி மக்கள் இ... மேலும் பார்க்க

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கக் கோரிக்கை

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அருகே சுரைக்காயூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம், மக்கள் ... மேலும் பார்க்க

குடிநீா், சாலை வசதி கோரி மே 27 இல் போராட்டம்

நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் குடிநீா் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி, மே 27-இல் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்து முன்னணியின் நன்னிலம் ஒன்றிய... மேலும் பார்க்க