செய்திகள் :

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 7% குறைவு

post image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இதுவரை, இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை 1 முதல் சனிக்கிழமை (ஜூலை 27) வரை இயல்பாக 108.6 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால், நிகழாண்டில் 101.3 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பைவிட 7% குறைவு. எனினும், தமிழகத்தில் மாவட்டம் வாரியாக ஒருசில மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் 164.3 மி.மீ. (339 சதவீதம் அதிகம்), தென்காசியில் 184.5 மி.மீ. (125 சதவீதம் அதிகம்), தேனியில் 144.5 மி.மீ. (96 சதவீதம் அதிகம்), கோவையில் 573.2 மி.மீ. (60 சதவீதம் அதிகம்) மழை பெய்துள்ளது.

இதே காலகட்டத்தில் சென்னையில் இயல்பாக 152.3 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், நிகழாண்டில் இயல்பைவிட 30 சதவீதம் அதிகமாக 198.4 மி.மீ. மழை பெய்துள்ளது. மிகவும் குறைவாக தூத்துக்குடியில் 0.4 மி.மீ. (97 சதவீதம் குறைவு), கரூரில் 2.2 மி.மீ. (95 சதவீதம் குறைவு), திருச்சியில் 8.7 மி.மீ. (87 சதவீதம் குறைவு) மழை பெய்துள்ளது.

வானிலை நிலவரம்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) முதல் ஆக. 1-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

120 மி.மீ.: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சின்னக்கல்லாறு (கோவை) 80 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:  இதற்கிடையே, ஞாயிறு, திங்கள்கிழமை (ஜூலை 27, 28) தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க

6 மாதகால கர்ப்பம்! இரண்டாவது திருமணம் செய்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

கோவையைச் சேர்ந்த நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், முன்னணி நட்ச... மேலும் பார்க்க