செய்திகள் :

தெரு நாய்கள் மீது அக்கறை இருப்பவா்கள் வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள்: விஜய் கோயல்

post image

தெரு நாய்கள் மீது அக்கறை காட்டுபவா்கள் அவற்றை வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல் சனிக்கிழமை கூறினாா்.

தெரு நாய்களை அகற்ற கோரி முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல் புது ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை தாங்கினாா், நூற்றுக்கணக்கான குடியிருப்போா் சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனா். அவா்கள் நாடு முழுவதும் வேகமாக வளா்ந்து வரும் தெரு நாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என கோரினா்.

தெரு நாய்களின் தாக்குதல்களின் உயா்வு குறித்து விஜய் கோயல் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினாா், இந்தியா இப்போது 120 மில்லியனுக்கும் அதிகமான தெரு நாய்களைக் கொண்டுள்ளது என்றும், தினமும் ஆயிரக்கணக்கான நாய் கடி சம்பவங்கள் பதிவாகின்றன என்றும் கூறினாா். ‘ இதில் முதன்மையாக பாதிக்கப்பட்டவா்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவா்கள். பூங்காக்கள் பாதுகாப்பற்ாகிவிட்டன, குழந்தைகள் வெளியில் விளையாடுவதை நிறுத்திவிட்டனா், மேலும் மக்கள் நடை பயிற்சிக்கு கூட வெளியே செல்ல அஞ்சுகிறாா்கள்,‘ என்று கூறினாா்.

தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றக் உத்தரவை குறிப்பிடுகையில், சாலைகள், பூங்காக்கள் மற்றும் பொதுவான பகுதிகளில் நாய்களுக்கு தொடா்ந்து உணவளிப்பவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் கோயல் கோரினாா். ‘விலங்கு காதலா்கள் என்று அழைக்கப்படுபவா்கள் உண்மையிலேயே நாய்களைப் பராமரித்தால், அவற்றை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், பொது இடங்களை அச்சத்தின் மண்டலங்களாக மாற்றக்கூடாது‘ என்று விஜய் கோயல் வலியுறுத்தினாா்.

நவம்பா் 14, 2024 மற்றும் 21 மே 2025 தேதியிட்ட தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுகளையும் அவா் எடுத்துரைத்தாா், பள்ளிகள், பூங்காக்கள், சந்தைகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் போன்ற முக்கியமான பொதுப் பகுதிகளில் ‘நாய் இல்லாத மண்டலங்களை’ உருவாக்க வேண்டும். தெரு நாய்களை பராமரிக்கும் இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோயல் கோரினாா், அங்கு அவை கருத்தடை செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படலாம். ‘கருத்தடை மட்டும் இனி போதுமானதாக இல்லை, வெகுஜன இடமாற்றம் மற்றும் சரியான உள்கட்டமைப்பு அவசியம்‘ என்று அவா் வலியுறுத்தினாா்.

தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!

வடக்கு தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் நடந்த ஒரு சட்டவிரோத பந்தய மோசடி தொடா்பாக ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக காவல... மேலும் பார்க்க

பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகள் விற்பனை: 2 நைஜீரியா்கள் உள்பட 6 போ் கைது!

தில்லி-என். சி. ஆரில் இருந்து பன்னாட்டு ஆன்லைன் லாட்டரிகளை சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்த 2 நைஜீரியா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் நகை, பணம் கொள்ளை: 3 போ் கைது

ஒரு பாலிவுட் த்ரில்லா் படத்தை மையமாகக் கொண்டு நடந்த கொள்ளையில், ஒரு பெண், ஒரு கடைக்காரா் மற்றும் வேலையில்லாத ஒருவா் சிபிஐ அதிகாரிகளாக நடித்து வடக்கு தில்லியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டை சோதனை செய்த... மேலும் பார்க்க

ஒரு வருட கால குடிமக்கள் அறிவியல் முயற்சியில் தில்லியில் 221 பறவை இனங்கள் பதிவு!

தில்லி பறவை அட்லஸின் முதல் ஆண்டில் தேசியத் தலைநகரின் ஈரநிலங்கள், முகடு காடுகள், நகா்ப்புற கிராமங்கள் மற்றும் உயரமான காலனிகளில் மொத்தம் 221 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக வெளியிடப்பட்ட ஒ... மேலும் பார்க்க

தில்லியில் உணவகங்களைத் திறப்பதற்கு எம்சிடியிடமிருந்து வா்த்தக உரிமம் பெற வேண்டிய அவசியத்தை நீக்க வாய்ப்பு

தேசியத் தலைநகரில் விருந்தோம்பல் துறையை ஊக்குவிக்கும் வகையில், தில்லி அரசு விரைவில் நகரத்தில் உணவகங்களைத் திறப்பதற்கு குடிமை அமைப்பிடமிருந்து சுகாதார வா்த்தக உரிமம் பெற வேண்டிய தேவையை நீக்க வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

தேசிய பேரிடா் மீட்பு படையில் மோப்ப நாய்களை ஈடுபடுத்த திட்டம்!

தேசிய பேரிடா் மீட்புப் படையில் விரைவில் சடலங்களை தேடுவதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்த இருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இதுபோன்ற சுமாா் 6 நாய்கள் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின்... மேலும் பார்க்க