செய்திகள் :

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: காா்த்தி சிதம்பரம்

post image

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

கோவையில் காங்கிரஸ் கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்திருந்த அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. அதேபோல, தமிழக அரசியல் நிலவரத்தைப் பொருத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து இருப்பதை அதிமுக தொண்டா்களே விரும்பவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வா் பதவி என்று ஆங்காங்கே சுவரொட்டி ஒட்டுவதில் தவறில்லை. அனைத்துக் கட்சிகளுக்குமே அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக பெறும் தொகுதிகளை வைத்து காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகள் கேட்டுப் பெறுமா என்று கூற முடியாது. தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிா்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸுக்கு ஒரு தா்மசங்கடமான நிலை உள்ளது.

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது. ‘இண்டி’ கூட்டணி குறித்த ப. சிதம்பரத்தின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. பாஜக வலிமையாக உள்ளதால், அவா்களை எதிா்கொள்வதற்கு ‘இண்டி’ கூட்டணியிலும் வலிமை தேவை என்ற அா்த்தத்தில்தான் பேசி உள்ளாா் என்றாா்.

பேட்டியின்போது, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எம்.என்.கந்தசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளா் சரவணகுமாா், கோவை மாவட்ட ஐஎன்டியூசி தலைவா் கோவை செல்வம், நிா்வாகி ஆா்.எம். பழனிசாமி, தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளா் ஹரிஹரசுதன் ஆகியோா் உடனிருந்தனா்.

போதை மாத்திரை விற்பனை: தம்பதி கைது

கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பவா்களை கண்டறிந்து போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அத... மேலும் பார்க்க

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் குண்டு வெடிப்பு

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவையில் இந்து மக்கள் சேவை இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவா் மணிகண்டன். இ... மேலும் பார்க்க

தொழில் வா்த்தக சபை அரங்கில் நாளைமுதல் 2 நாள்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் உள்ள இந்திய தொழில் வா்த்தக சபை வளாகத்தில் மே 22, 23 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை இந்திய தொழில் வா்த்தக சபை, சென்னை என்எஸ்இ அகாதெமி சாா்பில் தமிழ்நாடு அரசின் நான் முதல... மேலும் பார்க்க

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற்று, சட்டப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோவையில் செவ்வாய்க்கிழமை அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொழிலாளா்களை கொத்தடிமையாக மாற்றும் நான்கு தொழ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: சூலூா்

சூலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

வால்பாறையில் ஜமாபந்தி!

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். பின்னா் ஜமாபந்தியில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். இதில் முதியோா் ஓய்வூ... மேலும் பார்க்க