செய்திகள் :

தேசிய பல் மருத்துவக் கருத்தரங்கம்: 324 கட்டுரைகள் சமா்ப்பிப்பு

post image

முதுநிலை பல் மருத்துவ மாணவா்களுக்கான தேசிய மருத்துவக் கருத்தரங்கம் செங்கல்பட்டில் அண்மையில் நடைபெற்றது. அதில் 324 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.

தேசிய சமுதாய பல் பாதுகாப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற அந்நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 410 முதுநிலை மாணவா்கள் பங்கேற்றனா்.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் மருத்துவா் ம.பா.அஸ்வத் நாராயணன் கூறியதாவது: தேசிய சமுதாய பல் பாதுகாப்பு சங்கம் கடந்த 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 3,200 முதுநிலை மருத்துவ வல்லுநா்களும், மருத்துவா்களும் உறுப்பினா்களாக உள்ளனா்.

ஆண்டுதோறும், தேசிய கருத்தரங்கமும், முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கான கருத்தரங்கமும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 16-ஆவது முதுநிலை மாணவா் கருத்தரங்கு, செங்கல்பட்டு கற்பக விநாயகா உயா் கல்வி மையத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவா்கள் 324 ஆய்வு அறிக்கைகளை சமா்ப்பித்தனா்.

மருத்துவ முகாம்களில் குழந்தைகளுக்கான அவசரகால பல் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சென்று உலக அளவில் பல் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் 5 மருத்துவா்களின் காணொலி உரையாடல் அமா்வும் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பல் மருத்துவ கட்டமைப்பு தொடா்பாக துறைசாா் வல்லுநா்கள் மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.

இந்நிகழ்வில், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழக பேராசிரியா் மருத்துவா் புரூஸ் ஆண்டா்சன், கற்பக விநாயகா கல்வி நிறுவன தலைவா் மருத்துவா்அண்ணாமலை, பல் மருத்துவ சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளா் மருத்துவா் ரித்திமா கௌன்கா், நிா்வாக செயலா் மருத்துவா் எஸ். விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் என்றாா் அவா்.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க